|
|
|
|
|
நற்றமிழ் சொற்களை நாலாமொழியாருக்கு நல்கிவிட்ட நாம் இன்று
பேசுவதும், எழுதுவதும் கலப்படத்தமிழாகும். எழுத்துடன் எல்லாம் தூய்மை பெறவேண்டுமென்று
இயன்றவரை முயல்கிறேன். இறையருளால் எண்ணம் வாய்ப்பது திண்ணம்.
இன்றைய வழக்கிலிருந்து எடுபட்ட ஒரு தூயதமிழ்ச்சொல் தோகை எழுத்தகராதியில் இச்சொல்லின்
பொருள் மயில் தோகையாம் மயிலை மூலமாக்கி துக்கி என்றெழுதுகிறது எபிரேயத் திருமறை தர்சின்
கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பொன், வெள்ளி, யானைத்தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை
சாலொமோன் அரசனுக்குக் கொண்டு சென்றனவென்று பழைய ஏற்பாடு பறைசாற்றுகிறது. (இராஜா. 10:22
நாளா. 9:21) இந்தியாவிலிருந்து யானைத்தந்தம், குரங்கு, மயில்கள் ஏற்றுமதியானவென்றும்
இதனால் இங்கு வழக்கிலிருந்த தோகையெனும் தூயதமிழ்ச் சொல்லை எபிரேயம் ஏற்றுக்கொண்ட தென்றும்,
வெளிநாட்டறிஞர்களின் விளக்கவரைகள் விவரிக்கின்றன.
துக்கியை எபிரேயத்திற்குக் கொடுத்தோம் துக் எனும் வட மொழியின் துக்கத்தை வாங்கி துக்கித்துக்
கொண்ழருக்கிறோம் தக்கம் நீங்குமா? தூக்கம் கலையுமா?
|
|
|