உமது விருப்பே நன்மையாகும்!

உமது வாக்கின்படியே ஆகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:38.
38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

கிறித்துவில் வாழ்வு:
நிந்தை அவச்சொல் நெடுங்கதையாய் வரும்;
நிம்மதி குலைக்கும் உறவுகளே தரும்.
இந்த நிலையைப் புரிந்த எவரும்,
ஏற்பாரோவென நீவிரே கூறும்.
தந்தை இறையின் வாக்கே போதும்;
தவறு வராது அதில் எப்போதும்.
எந்தத் துன்பம் எவர் தந்தாலும்,
இறையின் விருப்பே நன்மையாகும்!
ஆமென்.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

கூடும், இறையால் கூடும்!

கூடும், இறையால் கூடும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:36-37.

36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
தேடும் கடவுளைத் தேடும்;
தெளிவு பெறவே தேடும்.
கூடும், யாவும் கூடும்;
கிறித்து அருளால் கூடும்.
ஓடும், பகைமை ஓடும்;
உண்மை வெல்ல, ஓடும்.
நாடும், வலுவை நாடும்;
நாடும் வாழ, நாடும்!
ஆமென்.

Image may contain: 1 person, playing a sport and text

கிறித்துவின் வாக்கு

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:34-35.

34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
எப்படியாகும் என்றே கேட்கும்,
எனது அருமை நண்பர்களே,
இப்படிச் செய்ய இறையால் கூடும்
ஐயம் தவிர்த்து எண்ணுங்களே.
அப்படி மைந்தன் பிறந்ததினால்தான்,
ஆண்டவர் என்கிறோம் அன்பர்களே;
ஒப்புமையில்லா இப்பெரும் செயலால்,
உமக்கும் மீட்பு, நம்புங்களே!
ஆமென்.

Image may contain: text

இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!

இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:31-33.

31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அன்றொரு தூதன் உரைத்தது கண்டீர்;
அதன்படியானதும் அறிந்து கொண்டீர்.
என்றபோதிலும் இறைவழி மறந்தீர்;
ஏற்க மறுத்து, எங்கோ பறந்தீர்.
கன்னி மரியின் பற்றை நினைப்பீர்;
காற்பங்காவது பற்றி அணைப்பீர்.
இன்றைக்காவது ஏற்றுக் கொள்வீர்;
இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
ஆமென்.

Image may contain: 1 person, text
 

மரியின் அச்சம்!

மரியின் அச்சம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா1:30.

30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

கிறித்துவில் வாழ்வு:
கன்னி ஒருத்தி கருவுற்றாள் எனில்,
காண்போர் பழிக்கும் காலமது.
அன்னை மரியும் அதனை நினைத்து,
அச்சம் கொள்வதில் தவறேது?
என்றபோதிலும் இறைவிருப்பிற்கு,
ஈந்தளித்தல் காணும்போது,
முன்பு நிற்கத் தகுதியில்லை;
என்றுணர்ந்தேன், உண்மையேயிது!
ஆமென்.

Image may contain: 1 person

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்து!

அரசியல், சமுக வீழ்ச்சிகளால்,
அடிமை ஆனோம் அன்னாளில்.

இரக்கம் இல்லா ஆட்சிகளால்,
ஏற்றமும் காணோம் இன்னாளில்.

முரடர், திருடர் நீக்கிவைத்தால்,
முன்னேறிடுவோம் பின்னாளில்.

உரக்கக் கூறியும் போக்குரைத்தால்,
உமக்கு விடுதலை என்னாளில்?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and close-up

நல்லவரேசு எனது கோனார்!

நல்லவரேசு எனது கோனார்!

உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.

எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.

கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.

நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text and nature

யார் தந்தார் விடுதலை?

யார் தந்தார் விடுதலை?

யார் இவர் என்று தெரியவில்லை;
இவரது எண்ணமும் புரியவில்லை.

நேர்மையாக நாம் நோக்கின்,
நிகழ்ந்தவை உண்மை, வேறில்லை

பார், இதோ விடுதலை என்றவர்கள்,
பசித்தவருக்குத் தரவில்லை.

தேர்தலில் வென்று சென்றவர்கள்,
தொண்டு செய்யவே வரவில்லை!

-கெர்சோம் செல்லையா.

-3:45

524,699 Views

ஆய்வோம் இறைவாக்கை!

எண்ணி ஆய்வோம் இறைவாக்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா:1:29
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
வாக்கின் விளக்கம் புரியாமல்,
வருத்தம் கொள்வோர் நாமென்றால்,
நோக்கிப் பார்ப்போம் மரியாளை,
நொடியில் கலக்கம் நீங்கி விடும்.
ஏக்கம் எதுவும் கொள்ளாமல்,
இறையின் வாக்கை ஆய்ந்திட்டால்,
தாக்கும் வருத்தம் தவிடாகும்;
தருவார் வாழ்த்து, வாங்கி எடும்!
ஆமென்.

No automatic alt text available.

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!
இறைவாக்கு: லூக்கா 1;26-28.
26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

இறைவாழ்வு:
மறைவழி வாழும் மாண்பு கொண்டோர்,
மாநிலத்தில் இன்று அரிதாகும்.
இறைவனும் இவரில் மகனாய்ப் பிறத்தல்,
எல்லா அரிதிலும் பெரிதாகும்.
குறையுள்ள நம்மில் நிறைவாய் வாழ்ந்து,
கொடுத்து வைத்தவர் மரியாகும்.
அறைந்திடும் ஆணியாகவே சொல்வேன்,
ஆண்டவர் தேர்வே சரியாகும்!
ஆமென்.

Image may contain: one or more people, wedding, outdoor and nature