மண்டு, மண்டு!

இரக்கம் கொண்டவர் இறைவன்!
இறை வாக்கு: லூக்கா 1:59-63.
59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இறைவாழ்வு:
இரக்கம் கொண்டவர் இறைவன் என்று,
யோவான் பெயரில் கண்டோம் அன்று.
உரக்கச் சொல்வோம் நாமும் இன்று,
இறையின் அருளே வாழ்வில் நன்று.
அரக்கத் தன்மை கொண்டவர் கண்டு,
அதுவே சரியெனச் சொல்பவர் உண்டு.
முரடர் மூடர் கதைகள் கொண்டு,
முடிவு செய்வோர், மண்டு, மண்டு!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்…

இறைவாக்கு: லூக்கா 1:56-58.

56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.

இறைவாழ்வு:
பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்;
பெறாதவள் பெற்றால் பெருமகிழ்வாகும்.
உள்ளத்தின் மகிழ்வு உறவிலும் பரவும்;
உறவுகள் வழியாய் ஊரும் மகிழும்.
வெள்ளத்தின் வலிமை பெற்றிருந்தாலும்,
வேண்டும் இறையருள், பிள்ளை பிறக்கும்.
கள்ளத்தின் வாழ்வும் மலடேயாகும்;
கடவுளில் பிறப்போம், களிப்புண்டாகும்!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

அடகு வைக்காதீர்!

அடகு வைக்காதீர்!

ஐந்து காசில் உண்மை அற்றோர்
ஐந்தாயிரத்தை எடாரோ?
சொந்த வாழ்வில் நேர்மை அற்றோர்,
சுவைக்கும் பொதுவில் கெடாரோ?
இந்த நாளின் திரைப்படத்தவரால்,
எத்தனை இழிவு காணீரோ?
செந்தமிழ் நாட்டை அடகு வைக்காதீர்;
சிந்திப்பவரே நாணீரோ?

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

வாருங்கள், வறுமையை ருசித்தவரே!

வறுமையை ருசித்தவரே வாருங்கள்!

காட்சி காணாக் கண்களினால்,
மாட்சி அறிய இயலாதே!
மீட்சி என்பது தெரியாமல்,
ஆட்சி அமைக்க முயலாதே!

நேற்று வறுமை ருசித்தவரே,
மாற்று வழியைத் தருவாரே!
வேற்று மனிதர் தெரியாரே;
தோற்று போகவே வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: table, outdoor and water
LikeShow More Reactions

Comment

2018

இத்தனை ஆண்டுகள்…..
இத்தனை ஆண்டுகள் எனக்கீந்த,
இறைவா உனக்கென என் செய்தேன்?
பித்தனாய்ப் பொருளைச் சேர்ப்பதற்கு,
பெரும்பிழை அம்புகள்தான் எய்தேன்!
அத்தனைச் செயல்களும் வீணென்று,
அறிந்தபின் உன்னிடம் நான் வந்தேன்.
சித்தம் இனிமேல் உனதென்று
செய்திடும் உறுதியில் எனை ஈந்தேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
Virus-free. www.avast.com

இறைவா எனை நீ ஆளவேண்டும்!

இறைவா எனை நீ ஆளவேண்டும்!

உண்மை மட்டும் பேச வேண்டும்;
ஒழுக்கத்தில் நான் வாழ வேண்டும்.
நன்மை செய்யும் நெஞ்சு வேண்டும்;
நாட்டோருக்கு உதவ வேண்டும்.
விண்ணை முட்டும் அன்பு வேண்டும்;
விடுதலை ஈயும் வீரம் வேண்டும்.
எண்ணம் எதிலும் தூய்மை வேண்டும்;
இறைவா எனை நீ ஆளவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இரக்கம் கொள்வோம்!

இரக்கம் கொள்வோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:53-55.

53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் இல்லாச் செல்வந்தர்,
இரக்கும் நிலைக்கு வருவாரே.
சரக்கு போன்ற கல் நெஞ்சர்,
சரிவர விளைச்சல் பெறுவாரே.
அரக்கத் தன்மை கொண்டவர்க்கு,
அழிவு உறுதி, அறிவீரே.
உரக்கச் சொல்லும் இவ்வுண்மை,
உணர்ந்தால் வாழ்வு பெறுவீரே!
ஆமென்.

Image may contain: one or more people and outdoor

கடவுள் இல்லை!

கடவுள் இல்லை!

சாதிகள் பகுத்ததும் கடவுள் இல்லை.
சமயங்கள் வகுத்ததும் கடவுள் இல்லை.
நீதியை விடுவதும் கடவுள் இல்லை. 
நேர்மை இலாரில்தான் கடவுள் இல்லை!
ஆதியின் முன்பும் மனிதர் இல்லை.
அனைத்தும் படைக்கையில் நாமும் இல்லை. மீதியிருப்பதை ஆய்ந்தறிவோம்; மீண்டும் சொல்லோம் கடவுள் இல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, text
LikeShow More Reactions

Comment

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

முதலில் மதிக்கத் தொடங்குவோம்!

வயலில் வேலை

செய்தால்தான்,

வாய்க்குச்சுவையாய்,
சோறு வரும்.

வருவாய் இல்லை,
விட்டு விட்டால்,

வாழ நமக்கு
ஏது தரும்?

முயலும் உழவன்
முன் வந்தால்,

முதலில் மதிக்கக்
கற்று விடும்.

முற்காலத்துப்
பிழை நீக்கி,

முற்றும் நன்மை
பெற்று எடும்!

(கெர்சோம் செல்லையா)

Image may contain: 1 person, smiling, beard, outdoor and close-up
LikeShow More Reactions

Comment

யார் கடவுள்?

யார் கடவுள்?

உண்மையின் உருவே கடவுள்.
ஒளியின் அறிவே கடவுள்.
பண்பின் நிறைவே கடவுள்.
படைத்து மீட்பவர் கடவுள்.
அன்பின் வடிவே கடவுள்.
அதற்கெனப் பிறந்தவர் கடவுள்.
நன்மையின் ஊற்றே கடவுள்.
நம்முள் உண்டோ கடவுள்?

– கெர்சோம் செல்லையா.

Image may contain: people standing, tree, grass, sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment