மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?

மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
இறைவாக்கு: லூக்கா 2:15-17.

15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

இறைவாழ்வு:
கேட்டவர் சென்று கண்டறிந்தார்;
கிறித்து பிறந்ததை நன்கறிந்தார்.
நோட்டம் விட்டவர் செல்லாமல்,
நொடிந்தோர் மகிழ நன்குரைத்தார்.
ஓட்டைப் பானை ஒழுகுதல்போல்,
ஒரு பயனில்லா நம் வாழ்வில்,
மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
மேய்ப்பரின் வழியில் சிறப்போமா?
ஆமென்.

Image may contain: outdoor, nature, water and text
LikeShow More Reactions

Comment

மண்ணில் அமைதி மலர்வதற்கென்று…

மண்ணில் அமைதி மலர்வதற்கென்று…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:13-14.
13 அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
மண்ணில் அமைதி மலர்வதற்கென்று,
மனிதரை இணைக்கும் பணி செய்வோம்.
எண்ணம், பேச்சு, செயலில் இன்று,
இறைவன் அன்பால் அணி செய்வோம்.
விண்ணின் வேந்தன் மாட்சியடைய,
விரும்பும் நன்மையைத்தாம் செய்வோம்.
திண்ணம் ஒரு நாள் தீமை ஒழியும்;
தெய்வ அரசாய் நாம் உய்வோம்!
ஆமென்.

No automatic alt text available.

குறையில்லை!

குறையில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2 : 10 -12.
10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தத் திங்கள், எந்த ஆண்டு
எந்த நாளெனத் தெரியவில்லை.
என்றபோதும் இயேசு பிறப்பை,
எவரும் மறுக்க இயலவில்லை.
வந்து பிறந்த குழந்தை தந்த,
வாழ்வில் மகிழ்வு குறையவில்லை.
வாழ விரும்பின் இயேசுவைப் பாரும்,
வழியாம் அவரில் குறையுமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people, people sleeping, baby and close-up
LikeShow More Reactions

Comment

நல்மனிதன்!

 

நல்ல மனிதன்!
 
நாட்டைப் பகுத்து ஆள்வோர் விளிக்க,
நானும் ஆனேன் இந்தியன்.
வீட்டில் பேசும் மொழியால் பிரிக்க,
வெளியாருக்கோ தமிழன்.
 
கேட்டினின்று கிறித்து மீட்க,
கிடைத்த பேறு கிறித்தவன்.
பாட்டைப் பாடும் நம்மில் இன்று,
பார்க்க வேண்டும் நல்மனிதன்!
-கெர்சோம் செல்லையா.
Image may contain: text
LikeShow More Reactions

Comment

கற்றோர் அறிஞர் இருக்கையிலே!

கற்றோர் அறிஞர் இருக்கையிலே!
இறைவாக்கு: லூக்கா 1:8-9.
8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இறைவாழ்வு:
கற்றோர் அறிஞர் இருக்கையிலே,
கல்லா மேய்ப்பருக்கேன் உரைத்தார்?
மற்றோர் அறியச் சொல்பவர்க்கே,
மகிழ்ச்சியின் செய்தியை முதலுரைத்தார்?
பெற்றேன் மீட்பு என்பவரே,
பிறரின் மீட்பிற்குரைத்தீரா?
சற்றே நின்று நிலையுணர்ந்து,
சான்றாய் மகிழ்வைப் பகிர்வீரா?
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

எத்தகைய வடிவில் இறை வருவார்?

எத்தகைய வடிவில் இறை வருவார்?
இறைவாக்கு: லூக்கா 2 :6 -7
6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.எத்தகைய வடிவில் இறை வருவார்?
7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
இறைவாழ்வு:
இத்தரையைப் படைத்தவரே,
இறங்கி நீர் வருகையிலே,
சத்திரத்தில் இடமிலையே;
சந்தித்தோர் தரவில்லையே!
புத்தியிலும் ஏறலையே;
பிறந்தவரை ஏற்கலையே;
எத்தகைய வடிவினிலே,
இறைவருவார், அறிவிலையே!
ஆமென்.
No automatic alt text available.

மண்ணரசு ஆணை மதிப்பவர் யார்?

அரசு ஆணையை மதிப்பவர் யார்?

இறைவாக்கு: லூக்கா 2:1-5.
1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2 சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

இறைவாழ்வு:

கண்மணி மனைவி கருவுற்றிருந்தும்,
கடக்கும் பாதை உருவற்றிருந்தும்,
எண்பது கற்கள் தொலைவு இருந்தும்,
யோசேப்படியார் கீழ்ப்படிந்தார்.
விண்வெளிக் கோள அறிவு இருந்தும்,
விரைந்து செல்லும் வசதி இருந்தும்,
மண்ணரசாணை தெரிந்திருந்தும்,
மாக்கள் இன்று கீழ்ப்படியார்!
ஆமென்.

Image may contain: 5 people, people smiling, people sitting
LikeShow More Reactions

Comment

அறியவேண்டிய ஆன்மிகம்!

அறியவேண்டிய ஆன்மிகம்!
இறைவாக்கு: லூக்கா 1:80.
80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
இறைவாழ்வு:

உண்மை உரைப்பதும், ஒழுக்கத்தை நிறைப்பதும்,
ஓரிறை காட்டும் தெய்வீகம்.
நன்மை புரிவதும், நன்றியைச் சொரிவதும்,
நாம் கற்க வேண்டிய ஆன்மிகம்.
பன்மை மதிப்பதும் பகைமையை மிதிப்பதும்,
படைத்தவர் பொழியும் அருள்மேகம்.
அண்மையில் நிற்கும் மனிதனை வெறுக்கும்
ஆன்மீகங்கள் பொய்யாகும்!
ஆமென்.

Image may contain: sky, cloud and text
LikeShow More Reactions

Comment

கைகள் குவிக்கின்றோம்!

கைகள் குவிக்கின்றோம்!

காட்டுத் தீயில் மாட்டிக்கொண்ட
காளையர் கன்னியர் மாணவரே,
ஏட்டுச் சுரைக்காய் என்றாகாது,
எட்டா மலைமேல் போனவரே.
மீட்டுக் கொள்ள வழியறியாது,
மிரண்டு கீழே தவிக்கின்றோம்;
ஆட்டுவிக்கும் ஆண்டவர் காப்பார்;
அனைவரும் கைகள் குவிக்கின்றோம்!
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

ஆதவனாலே ஒளி பெறுவார்!

ஆதவனாலே ஒளி பெறுவார்!

இறை வாக்கு: லூக்கா 1:78-79.
78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

இறைவாழ்வு:
பொருளைத் தேடி போனோர் இன்று,
பொய்யிருள் மூட அமர்ந்துள்ளார்.
திரு திருவென்று விழித்தும்கூடத்
தெரியா இருட்டில் அமிழ்ந்துள்ளார்.
ஒருவர் சென்று உதவி செய்தால்,
உண்மை அறிய வெளி வருவார்.
அருளின் இறையே, அன்பில் பாரும்;
ஆதவன் உம்மால் ஒளி பெறுவார்!
ஆமென்.

Image may contain: sky, cloud, mountain, grass, nature and outdoor
LikeShow More Reactions

Comment