ஆசு அகற்றுவோம்!

ஆசு அகற்றுவோம்!

மாசு குப்பை சேர்த்து வைக்கும்,
மக்கள் திரள்தான் மாநகரா?
ஆசு போக்க அறிவற்றவர்தான்,
அருமைப் பட்டண மானிடரா?
காசு சேர்க்கும் எண்ணம் நன்று;
கறையற்றவராய்ச் சேர்ப்பவர் யார்?
பேசு வாயால் தூசகலாது!
மாசகற்றும் வழியைப் பார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, people sitting, meme and text

நிறுவனங்களின் கைகளில் அரசிருந்தால்…

நிறுவனங்களின் கைகளில் அரசிருந்தால்…

மாழை எடுக்க மலையைப் பெயர்க்கும்
மாவலி கொண்ட எம்மரசே,
ஏழை இந்தியர் வறுமை போக்க,
ஏன் உனக்கு இயலலையே?
கீழை நாட்டின் ஆட்சிகள் யாவும்,
கெடுக்கும் நிறுவனக் கைகளிலே!
கோழையான தலைவர்கள் இதனால்
எழைக்கிரங்க இயலலையே!

கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
 

வீணாக்காமல் உதவுவோம்!

பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்

See more

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

Comments
Simon Dannie

Simon Dannie My India can never change.

1

Manage

LikeShow More Reactions

· Reply · 1d

Julius Karunakaran
Julius Karunakaran அற்புத கவிச் சொற்களின்
செல்வந்தர்..
அருமை…அருமை..!???

1

Manage

LikeShow More Reactions

· Reply · 1d

Gershom Chelliah
Write a comment…

வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!

எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்

See more

Image may contain: tree, sky, outdoor, nature and water
LikeShow More Reactions

Comment

மைசூர் மழை

மைசூர் மழையில் காத்த இயேசு!

இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!

-கெர்சோம் செல்லையா.

மைசூர் மழையில் காத்த இயேசு!

மைசூர் மழையில் காத்த இயேசு!

இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, cloud, house, tree, outdoor and nature
Image may contain: tree, plant, outdoor and nature
LikeShow More Reactions

Comment

ஆல் விழுந்த காட்சி கண்டு,

ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும், 
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, outdoor and nature

யார் மூத்தவர்

யார் மூத்தவர்?

பேரரே பாட்டர்க்கு மூத்தவரென்று,
பெருமையில் பேசும் ஆரியரே,
சேரரும் சோழரும் தோன்றிடு முன்பு,
சென்றவர் பாண்டிச் சீரியரே!
நீரதைத் தோண்டி நிலத்தைப் பிளப்பின்,
நேர்மை எதுவெனத் தெரிவீரே.
யாரெமை ஆண்டால் எமக்கொன்றுமில்லை
என்கிற தமிழரைப் புரிவீரே!

-கெர்சோம் செல்லையா.

வெள்ளை நிறத்தில் கல்லறைகள்!

வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!

எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, sky, outdoor, nature and water
LikeShow More Reactions

Comment

வீணாக்காமல் உதவுவோம்!

வீணாக்காமல் உதவுவோம்!

பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்
காண்பீர் என்றால், நாம் தேடோம்.
கொட்டிடும் உணவைக் கொடுப்பீரென்றால்,
கொஞ்சங் கூட நாம் கொடோம்.
விட்டிடுவோம் இந்த கெட்ட வாழ்க்கை;
வீணாக்காது உதவிடுவோம்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

உழைப்போம், உயர்வோம்!

உழைப்போம், உயர்வோம்!

உழைப்பவர் இழப்பவராகி விட்டால்,
உயராதென்றும் ஒரு நாடு.
பிழைப்பவர் ஏற்க மறுத்து விட்டால்,
பெருமையின் முடிவு சுடுகாடு!
அழைத்தவர் உழைப்பை மதித்துவிட்டால்,
அதுதான் சிறந்த பண்பாடு.
தழைப்பவர் இனிமேல் யாரென்றால்,
தாழ்நிலை ஏழை எனப் பாடு!

-கெர்சோம் செல்லையா.

 

Image may contain: one or more people

எண்ணும் மரியாள்!

எண்ணும் மரியாள்!
இறைவாக்கு: லூக்கா 2:18-20.
18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.

இறைவாழ்வு:
பிஞ்சுக் குழந்தை மடியிலிருக்கப்
பேசும் மேய்ப்பர் சொல் கேட்டாள்.
அஞ்சும் நிலையில் அவளிருந்தாலும்,
அதனைப் பொருட்படுத்தாது விட்டாள்.
நெஞ்சில் நினைத்து வைத்தது எல்லாம்,
நேர்மையாளர் வாக்காகும்.
கெஞ்சிக் கேட்கும் நாமும் எண்வோம்;
கிறித்து வாக்கே வாழ்வாகும்!
ஆமென்.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment