ஆவியர் வழிநடத்தல்

ஆவியர் வழிநடத்தல்
இறைவாக்கு: லூக்கா 2:26-28.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:

கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாம் அறியோம்;
நடத்தும் ஆவியர் அறிகின்றார்.
வேளை வருமுன் பணிமுடிக்க,
வேண்டும் வலுவும் தருகின்றார்.
ஏழை என்னால் இயலாது,
என்று எங்கும் கூறாது,
தோழர் ஆவியர் துணை கேட்டு,
தொடர்வோருக்கு அருள்கின்றார்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

நற்றமிழை நாம் அழித்தோம்!

​நற்றமிழை நாம் அழித்தோம்!

நாற்றம் எனும் நறுமணத்தை
நாம் இன்று இழந்தோம்.
தூற்றுகின்ற சொல்லாக்கித்
தூய மயிர் களைந்தோம்.
ஏற்ற பொருள் சேரியினை
இழிவாக்கிப் பழித்தோம்.
மாற்றம் என நாம் நம்பி,
மயக்கு தமிழ் அழித்தோம்!
-கெர்சோம் செல்லையா.
பி.கு:
நாற்றம் = நறுமணம் (நாத்தம் அல்ல!)
மயிர் = முடி
சேரி = சேர்ந்து வாழும் இடம்

இறைப் பற்றும் நேர்மையும்!

இறைப் பற்றும் நேர்மையும்!
இறைவாக்கு: லூக்கா 2:25.
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
இறைவாழ்வு:
இறைப் பற்று கொண்டவர் என்றால்,
இறைவனின் பண்பு பெற்றிடவேண்டும்.
நிறைவான நேர்மை வழியில்,
நித்தம் நடந்து கற்றிட வேண்டும்.
குறைப் பேறாய் பிறந்த நானோ,
குற்றம் பெருகத் தலை குனிந்தேன்.
சிறைப் பறவை ஆகாதிருக்க,
சீரேசுவே உமைப் பணிந்தேன்!
ஆமென்.

Image may contain: night

தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!

தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!

பட்டவனுக்கே பட்டினி தெரியும்;
பார்ப்பானுக்குத் தெரியாதே!
(பார்க்கின்றவனுக்குப் புரியாது என்று பொருள் கொள்க!) 
கெட்டவனுக்கே குறைகள் தெரியும்;
கெடுக்கும் இவரிடம் சரியாதே!

முட்டாள்கூட கற்றுத் தேர்வான்;
முதலில் நடன் பின் செல்லாதே.
கொட்டும் மக்கள் சினத்தின் முன்பு,
கோணல் அறிவு நில்லாதே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, sitting and outdoor
LikeShow More Reactions

Comment

ஒப்புக்கொடுத்தல்!

ஒப்புக்கொடுத்தல்!
இறைவாக்கு: லூக்கா 1:22-24.

22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.

இறைவாழ்வு:

உடல் பொருள் ஆன்மா உயிரைக் கொடுக்கும்,
கடவுளை வணங்கக் கற்புடன் வாரீர்.
மடை திறந்தாற்போல், மாண்புகள் பெருகும்;
தடையும் இல்லை; இறையிடம் சேரீர்.
இடை வாழ்நாளில் இறைவன் அளிக்கும்,
இனிய செல்வம் குழந்தை பாரீர்.
குடை நிழலாகக் குடும்பம் காக்கும்,
கடவுட் கையில் அதனைத் தாரீர்.
ஆமென்.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment

Comments

காசு பேசும் காலம் இது

காசு பேசும் காலம் இது;
மாசு என்றால் கேளாது!
தூசு போல நமை நினத்தார்,
தூத்துக்குடியை வதைத்து!

-கெர்சோம் செல்லையா.

உங்கள் கண்கள் எங்கே?

உங்கள் கண்கள் எங்கே?

உங்கள் வீட்டின் இழவிற்கெல்லாம்
எங்கள் நெஞ்சு அழுததே.
எங்கள் வீட்டின் இழப்பைக் கண்டு
உங்கள் கண் ஏன் நழுவுதே!
தங்கள் பதவி, பணத்தைக் காக்கும்
தலைமை வேண்டாம், போதுமே!
இங்கே இனிமேல் இறைதான் தலைவர்;
இறைவன் வாக்கு ஓதுமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 18 people, including S.s. Davidson and Inigo Pious, people standing

Want to tag S.s. Davidson?  

Yes · No
LikeShow More Reactions

Comment

மனித நேயம் கொன்றோம்!

மனித நேயம் கொன்றோம்!

தூய நீரும் காற்றுந்தானே,
தூத்துக்குடியார் கேட்டார்.
நேயமற்ற பாவியரோ,
நெஞ்சிலும் வாயிலும் சுட்டார்.
ஆயரைத்தான் அரசன் என்று,
அந்த நாளில் கொண்டோம்.
மாயமாகும் மண்ணாட்சியில்,
மனித நேயம் கொன்றோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and text
LikeShow More Reactions

Comment

பெயரைப் பார்ப்போம்!

பெயரைப் பார்ப்போம்!
இறைவாக்கு: லூக்கா 2 :21
21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

இறைவாழ்வு:
பெயரில் என்னப் பெருமை என்று
பேசும் மக்கள் சிலருண்டு.
துயரில் இதனால் மீட்பை இழந்து
துடித்துப் போவோர் பலருண்டு.
உயரம் தாண்ட அறியார் இவர்க்கு,
உண்மை என்னப் புரியவில்லை.
முயலும் முன்னே அறியும் இறையின்
பெயரே மீட்பு, வேறில்லை!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

காது இருப்பின், கேட்போம்!

காது இருப்பின், கேட்போம்!

சூது எண்ணம் நிறைந்தோரைத்தான்,
சிறந்த அறிஞர் எனக் கண்டோம்.
தீது இதனால் வருவதை மறந்து,
திருடரைத் தலைவர் எனக் கொண்டோம்!
ஏது வேறு எங்கும் இல்லை;
எண்ணும் நெஞ்சைக் கழுவிடுவோம்.
காது கேட்க மறுப்போமென்றால்,
கடவுளின் தீர்ப்பில் அழுதிடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Commen