அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.

அமைதி காப்போம்!

அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.

யார் விருப்பு?

அடியார் விருப்பா? ஆண்டவர் விருப்பா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:33.
33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
பேதுரு யோவான் யாக்கோபன்று,
பெரிதாய் ஒன்றும் கேட்கவில்லை.
தூதுரை கொடுக்க, இடங்கள் மூன்று,
துவக்குதல் தவிர நாட்டமில்லை.
மூதுரை என்று பலர் நினைத்தாலும்,
முதலில் இறைவிருப்பது இல்லை.
ஏதிடம் ஏற்றது இயேசு அறிவார்;
இவர் விருப்பறிந்தால் தீதில்லை!
ஆமென்.

அருஞ்செயல்!

திரைக் கதை மிஞ்சும் அருஞ்செயல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:30-32.
30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அரைத்தூக்கத்தில் அமிழும்போதும்,
ஆண்டவரிடத்தில் அண்டிடுவோம்.
உரைப்பதர்க்கரிய உண்மைப் பொருளை,
உறங்கா அவரில் கண்டிடுவோம்.
இரைப்பை நிரப்புதல் போதும் என்ற,
இன்றைய ஊழியம் விட்டிடுவோம்.
திரைக்கதை மிஞ்சும் அருஞ்செயல் கண்டு 
தெய்வ அரசினைக் கட்டிடுவோம்!
ஆமென்.

உள்ளிலும் உருவிலும் மாற்றம்!

உள்ளிலும், உருவிலும் மாற்றம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:28-29.

28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.

கிறித்துவில் வாழ்வு:
உம்மை வேண்டிப் பணியும் வேளை,
உள்ளில் தூய்மை வருவதினால்,
அம்மை யப்பன் என்னும் இறையே,
அடியர் உருவில் மாறுகின்றோம்! 
எம்மை ஆட்டி அலைக்கழித்த
ஈன அலகை மறைவதினால்,
செம்மை நாடிச் செல்வோருக்குச் 
சிறந்த வழியும் கூறுகின்றோம்!
ஆமென்.

தாய், தந்தை, உலகம்!

தாய், தந்தை, உலகம்!

கல்வி அறிவே செல்வம் என்று,
கற்க வைத்தார் எம் தந்தை.
நல்ல பண்பே வாழ்க்கை என்று,
நடக்க வைத்தார் எம் அன்னை.
இல்லை இவைகள் தேவையில்லை,
என்று பார்த்தது பணச் சந்தை.
எல்லோருக்கும் அறிவையூட்டும்,
இறையை மறப்பதால், நிந்தை!

-கெர்சோம் செல்லையா.

உரு மாற்றம்!

உள்ளிலும், உருவிலும் மாற்றம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:28-29.
28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
கிறித்துவில் வாழ்வு:

உம்மை வேண்டிப் பணியும் வேளை,

உள்ளில் தூய்மை வருவதினால்,

அம்மை யப்பன் என்னும் இறையே,

அடியர் உருவில் மாறுகின்றோம்!

எம்மை ஆட்டி அலைக்கழித்த

ஈன அலகை மறைவதினால்,

செம்மை நாடிச் செல்வோருக்குச்

சிறந்த வழியும் கூறுகின்றோம்!ஆமென்.

இவைகள் வலைகள்!

இவைகள் வலைகள்!


கொன்று வந்த கொலைஞனையும்,

கொல்லத் தூண்டிய தலைவனையும்,

இன்று மக்கள் போற்றுவதால்,


ஏற்படுவதுதான் படுகொலைகள்!

என்று என்றும் நாம் அறியோம்;

எப்படி என்றும் நாம் தெரியோம்,

ஓன்று மட்டும் உறுதியென்போம்;

உணராருக்கு, இவை வலைகள்!


-கெர்சோம் செல்லையா.

நன்மை செய்வோம்!


நான்குபேர்க்கு நன்மை செய்யார்,

நல்லவராக இராரே.

ஏங்குவோர்க்கு இரங்காதிருப்பார்,

இயேசு பெயரைப் பெறாரே.

வாங்குவதில்தான் உலகோர் சிறப்பார்;

வழங்க மகிழ்ந்து வராரே.

தாங்குமிறையை நம்பி வாழ்வோம்;

தலை குனிவெதுவும் தராரே!


-கெர்சோம் செல்லையா.

இறைப்பற்று என்றால் என்ன?

இறைப்பற்று என்றால் என்ன?


இறைப் பற்றென்று இயம்புவதெல்லாம்,

இன்னொரு உயிரை எடுப்பதுவா?

விறைப்பாய் நின்று  வீரம் பேசி,

வெறியால், நன்மை தடுப்பதுவா?

குறைத்துப் பார்த்து, கொடுமை செய்து,

குற்றம் புரிந்ததை எண்வோமா?

முறைப்படி வாழ, முடிவை எடுத்து,

முதற்கண் அன்பைப் பண்வோமா? 


-கெர்சோம் செல்லையா.