முடித்தார்!

முடித்தார்!

இறை மொழி: யோவா 19:30.

30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இறை வழி:

மூன்று பதினொரு ஆண்டுகள் வாழ்ந்து,

மும்மையின் நடுவர் முடிக்கிறார்.

தோன்றிய நாள் முதல் தொடாதிருந்து,

தொலையாத் தீவினை முடிக்கிறார்.

ஆன்றவர் அறிவார், அருட் பயன் பெறுவார்;

ஆண்டவர் திருப்பணி முடிக்கிறார்.

சான்றினைக் கொண்டோர் தொடர்கிறார்;

சாகா வாழ்வு பிடிக்கிறார்!

ஆமென்.

May be an image of text

விடாய்த்தவர் கேட்டார்!

வேட்கை!

இறை மொழி: யோவான் 19: 28-29.

28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

இறை வழி:

உள்ளின் வேட்கை நிறைவேற்றும்

உன்னதர் திட்டம் முடிக்கையில்,

கள்வர் நடுவில் அவர் தொங்கும்,

கடைசி நேரம் நீர் கேட்டார்.

வெள்ளம் போன்று செந்நீரும்

வெகுமதி என்று வடிக்கையில்,

எள்ளிச் சிரிக்கிற இழிஞரிடம்,

ஏங்கி, இயேசு நீர் கேட்டார்!

ஆமென்.

May be an image of text that says 'to fulfill the Scripture He said... FTHIRST John John19:28 19:28 HIRST'

தாய்க்கொரு காப்பகம்!

தாய்க்கொரு காப்பகம்!

இறை மொழி: யோவான்:19:25-27.

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

இறை வழி:

கதியற்று நிற்கும் தாயைக் கண்டு,

கை விட்டு ஓடும் பிள்ளைகளே,

விதியென்று இயேசு உரைத்தது கேட்டு,

விரையும் யோவான் பாருங்களே.

மதியற்று மனிதர் தள்ளுதல் கண்டு,

மறு வாழ்வளிக்கும் உள்ளங்களே,

துதி புகழ் அல்ல, தூக்கும் சிலுவை;

துன்பில் இன்பம் சேருங்களே!

ஆமென்.

May be a black-and-white image of one or more people

உடை உரிந்தார்!

உடை உரிந்தார்!

இறை மொழி: யோவான் 19:23-24.

23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

இறை வழி:

இருந்த சொத்து உடுத்திய உடைகள்;

இயேசுவினின்று உரிந்தார்கள்.

தெரிந்த மானம் மறைக்கா படைகள்,

திருடி, பங்கிடத் தெரிந்தார்கள்.

வருந்தி அழுது உடுத்தும் கைகள்,

வராதிருந்ததில் வியப்பில்லை.

திருந்தினால் தான் திறக்கும் பைகள்;

தேவை கனிவு, கயப்பில்லை!

ஆமென்.

May be an image of 1 person

ஆளுநர் வீம்பு!

ஆளுநரின் வீம்பு!

இறை மொழி: யோவான் 9:21-22.

21. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

22. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.

இறை வழி:

விருப்பமில்லாமல் விட்டுக் கொடுப்பார்

வீம்பின் சிகரம் தொட்டும் கெடுப்பார்.

நெருப்புப் பிளம்பாய்க் கட்டிப் பிடிப்பார்

நீராய் மாறி வெட்டியும் வடிப்பார்.

பொறுப்பில்லா இருமனத்தார் ஆள்வார்.

போன பின்னர், காட்டிலே தாழ்வார்.

கருப்புச் சின்னமாய்க் கேட்டில் வாழ்வார்,

கால் கை கட்டப் பட்டே வீழ்வார்!

ஆமென்.

May be an image of 2 people

A

இயேசுவே அரசன்!

இயேசு அரசன்!

இறை மொழி: யோவான் 19: 19-20.

19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

இறை வழி:

எவ்வளவு முயன்று கெடுத்தாலும்

உண்மை ஒருநாள் வெளிப்படும்.

இவ்வளவு நிந்தை கொடுத்தாலும்,

இயேசுவே அரசன், எழுதப்படும்.

அவ்வளவு அறிவைப் பெற்றிருந்தும்,

அது புரியாமல் போனதே!

செவ்வளவு நேர்மை கற்றிடுவோம்;

செய்யும் இறையால் ஆனதே!

ஆமென்.

May be an image of text that says 'Meaning of the Inscription I.N.R.I. -IEVS N- NAZARENVS R- REX IVDAEORVM It is Latin which literally means: "Jesus of Nazareth, King of the Jews." Catholic Fortress'

அறைந்தார்கள் !

அறைந்தார்கள்!

இறை மொழி: யோவான் 19:18.

18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

இறை வழி:

குற்றமே செய்யா மனிதரைக் கொன்ற,

கொடூர செய்திகள் பல கேட்டு,

மற்றவர் தானே மடிகிறார் என்ற,

மமதை கொண்டு செல்கிறோம்.

சற்றுநேரம் சிலுவை முன் நின்று,

சாகும் கிறித்துவை நாம் தொட்டு,

உற்று நோக்கின் உணர்வோம் இன்று;

உயிர் மீட்சி கொள்கிறோம்!

ஆமென்.

May be an image of 1 person

இயேசுவும் நானும்!

இயேசுவும் நானும்!

இறை மொழி: யோவான் 19:17.

17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

இறை வழி:

ஈராயிரம் அடிகள் அன்று,

இயேசு சுமந்த சிலுவை.

தேறாதவர் மீள்வர் என்று

தெரிவிக்கும் பொறுமை.

ஆறாத சினத்தில் இன்று,

அதிர வைக்கும் செய்கை

பேராசான் முன்பு நின்று,

பேசும் என் வெறுமை!

ஆமென்.

No photo description available.

கும்பலின் நேர்மை!

கும்பலின் நேர்மை!

இறை மொழி: யோவான் 19:14-16

14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

இறை வழி:

ஆட்டமும் அகந்தையும் அள்ளியே விட்டு,

ஆள்பவர் நடப்பது கடுமையாம்.

கூட்டமும், கூச்சலும் கூறுதல் கேட்டு,

கொடுக்கும் தீர்ப்போ கொடுமையாம்.

வேட்டைக்காரரை நடுவாராய் வைத்து,

வேண்டி நாம் கிடப்பது மடமையாம்.

ஓட்டைப் பைகளை உடனடி தைத்து,

உண்மை சேர்ப்பதே கடமையாம்!

ஆமென்.

May be an image of one or more people

செயல்படாத நல்லெண்ணம்!

விருப்பமுண்டு, ஆனால்!

இறை மொழி: யோவான் 19:12-13.

12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

இறை வழி:

அன்றைய பிலாத்து ஆளுநர் போன்று,

அவதிப்படும் பல மனமுண்டு

கொன்றிடத் துடிக்கும் கூட்டம் சென்று,

கொடுக்க மறுக்கும் கனவுண்டு.

சிந்தையில் மட்டும் நினைப்பது அன்று;

செய்யாதிருந்தால் கடனுண்டு.

நன்மை எண்ணி நடத்திடு நன்று;

நல்லிறை, உன் உடனுண்டு!

ஆமென்.

May be an image of text that says 'THOSE WHO DO GOOD DEEDS WILL RISE TO A RESURRECTION OF... Life te John 5:29 Knowing-Jesus.com'