யார் உரைப்பார்?

யார் சொல்லக் கூடும்?
நற்செய்தி: யோவான் 8:46. 

நல்வழி: 

என்னில் தீது இல்லையென்று 

என்னால் சொல்லக் கூடுமோ? 

சொன்னால் அது உண்மையென்று,

சொல்கேள் கூட்டம் ஆடுமோ?

இன்னாள் இதனைச் சொல்வதற்கு,

இயேசு தவிர யாருண்டு?

பின்னாள் அவரே நடுவரென்று,

பிழை உணரப் பேருண்டு!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

நம்பு!

நம்புவோமா?

நற்செய்தி: யோவான் 8:45.45.

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

நல்வழி:

கண்ணில் தூய்மை காணாவிட்டால்,
காட்சி எங்ஙனம் தெளிவாகும்?
புண்ணின் நெஞ்சு நாணாவிட்டால்,
புரையும் எப்படி வெளியேறும்?
மண்ணின் தீமை கொண்டவர் நாமே.
மனதின் பொய்மை கரைத்திடுவோம்.
விண்ணின் உண்மை கண்டவராகி,
விடுதலை வாக்குரைத்திடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. See less

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


என் ஆசிரியர்!


என்னக ஒளியில், இறையருளோடு,

பன்னிலையாளர்  தூண்டலுண்டு.

முன்னிலை  நிற்கும் என்னாசிரியர்,

நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!


-கெர்சோம் செல்லையா.

மெய்யும், பொய்யும்!

மெய்யும், பொய்யும்!

  1. யோவான் 8: 44.

நல்வழி: 


மெய்யின் உருவே, இயேசு. 


மேன்மை கண்டு, பேசு.

தெய்வ மகனே, இயேசு.

தெரிந்து, மெய்யைப் பேசு. 


பொய்யின் வடிவே, பிசாசு.


புரிந்து, உண்மை பேசு.

செய்யும் தீங்கும், பிசாசு.

செயலில் நன்மை, பேசு!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

ஏன் கேட்கவில்லை?

ஏன் கேட்கவில்லை?


நற்செய்தி:யோவான் 8:43. 43. என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?  


நல்வழி:

கல்லைக் கனியச் செய்யும் ஊற்று,

கடவுள் வாக்கு என்றாலும்,

சொல்லைக் கேட்க விருப்பம் அற்று,

சொல்லும் மகனை மறுக்கிறார். 

நெல்லுக்குயிராம் நீர்நிலை ஏற்று,

நிலங்கள் விளைந்து நின்றாலும்,

புல்லுக்கொத்தோர் பொய்மை பெற்று,  

புறம் காட்டி வெறுக்கிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஓரினம்!

சாதிகள் நன்றோ?


முதலில் வந்த மனிதன் யாரோ?

முன்னோர் கூறும் ஆதம் பேரோ?

அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?

அப்படியாயின், சாதிகள் நன்றோ?

எதனை வாங்கக்  கோவில் சென்றாய்?

ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?

கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.

காணும் சாதிகள், சொறி, சிரங்கு!


-கெர்சோம் செல்லையா. 

www.thetruthintamil.com

நாலடி நற்செய்தி!மறுமுறை பார்ப்போம்!

ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.

தெரு இடம் இருக்க, போனது வலமே.

மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,

இருமுறை பிறக்கும்  இறையின் இனமே!


-செல்லையா.

பொய்யா மெய்யா?

பொய்யா? மெய்யா?


உள்ளே இருப்பது துரும்பு. 

ஊரில்  உரைப்பது இரும்பு.


வெள்ளி, பொன்னாய் நினைத்து,

விழாதீர், அலகை அணைத்து. 


எள்ளிலிருப்பது எண்ணெய்;


எடுக்கும் உழைப்பே  உண்மை.

கொள்ளி வைக்கும் பொய்மை.

கொள்வீர் இறையின் மெய்மை!

-கெர்சோம் செல்லையா. 

மதிக்கு நீதி கிடைக்குமா?

மதிக்கு நீதி கிடைக்குமா?

அழுது கொண்டே உயிர் விட்டாள்.

அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.

தொழுது கொண்டே தாய் கேட்டாள்.

தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.

எழுதி வைக்கிற விதி என்பார்.

இங்கும் நீதி கிடைக்கவில்லை.

பழுது எங்கே? பகுத்தே பார்.

பாராவிடில், கிடைப்பதில்லை!

–செல்லையா.

யோவான் 8:41-42.

நல்வழி:


அன்பே இறைவன் என்று மொழிவார்;

ஆயினும் அன்பை அவர் பொழியார்.

தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;

தமது செயலால் மகன் பழிப்பார்.

இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,

இயேசுவோடு பிணைந்திடுவார்.

நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,

நலமிலா தீதும் களைந்திடுவார்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.