பேரன்பு!
இறை மொழி: யோவான் 15:13.
13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
இறை வழி:
தன்னுயிர் கொடுக்கத் தயங்காதிருத்தல்,
தகைசால் அன்பெனக் கற்கிறேன்.
இன்னுயிர் ஈந்து, என்னையும் மீட்கிற,
இறைமகன் பண்பினால் நிற்கிறேன்.
என்னுயிர் மூச்சு இயங்காதிருத்தல்,
என்கிற நொடி வரை கேட்கிறேன்.
அன்பையே தாரும், அன்பையே தருவேன்.
அடியனும் ஆன்மா மீட்கிறேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.