பிரிவு!


பிரிவு!
இறை மொழி: யோவான் 16:31-32.

31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.

32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

இறை வழி:

தொட்டு, தொட்டுப் பார்த்தவர் 
துணையாக இருந்தவர், 
விட்டு, விட்டுப் போகிறார்.
விண் மகனோ வருந்தவில்லை.
கட்டு கட்டாய் இணைத்தவர்,
கண் மணியாய்க் காப்பவர்,
கெட்டு விழக் கைவிடார்; 
கேட்டும் ஏன் திருந்தவில்லை?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 
  



 

யோவான் 16:29-30.

இறையிலிருந்து வந்தவர்!

இறையிலிருந்து வந்தவர்!

இறை மொழி: யோவான் 16:29-30. 

29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.

30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

இறை வழி:

தந்தையிலிருந்து வந்தார் யாவரும் மைந்தர்.
தவறோ சரியோ, வாழ்கிறார் கண் முன்னர்.
வந்தார் கூட்டத்தில் இயேசு இறை மைந்தர்.
வாக்காய் வாழ்ந்த அவரரோ தூய பொன்னர்.
முந்தைய நிகழ்வை அறிந்தவர் மண் மைந்தர்.
முரண் கருத்தே  வரும் அவர் பின்னர். 
பிந்தைய காலம் காண்பவரோ இறை மைந்தர். 
பேரரசிணைக்கும் அவரே, நம் மன்னர்!
ஆமென். 
கெர்சோம் செல்லையா. 

கெர்சோம் செல்லையா. 

யோவான் 16: 27-28.

இறை வழி:


இறை அனுப்ப இயேசு வந்தார்;

இறையன்பை காட்டித் தந்தார்.

நிறைவாக்கும் கொண்டு வந்தார். 

நேர்மையையும் ஊட்டித் தந்தார்.

முறை என்ன? சொல்ல வந்தார். 

முழு அன்பே, மூட்டித் தந்தார். 

குறை மனிதர் கேட்க வந்தார். 

கொண்ட பேறு, நீட்டித் தந்தார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதி ஒன்றே!

சாதி ஒன்றேயாம்!

எல்லோரும் எல்லாத் தொழிலும் செய்யவில்லையா?

இறைவேண்டும் வாக்குகளும் பெய்யவில்லையா?

பொல்லார் புகாதபடி வீட்டினையும் காக்கவில்லையா?

புறம் சென்று வாங்கி விற்கவும் நோக்கவில்லையா?

மல்லுக் கட்டாமல், மறைவிலுடல் துடைக்கவில்லையா?

மாற்றாரையும் இதுபோல் இறை படைக்கவில்லையா?

சொல்லுங்கள் இப்போது, நாம் யார் என்ன சாதியென்று.

சொந்தம், ஓர் உறவு, ஒரே சாதி; இதுதான் நன்று!

-கெர்சோம் செல்லையா.

May be a doodle

வேண்டுகிறார்!

வேண்டுகிறார்!

இறை மொழி : யோவான் 16:26. 

வேண்டும் இறைமகன் காட்சி கண்டு,

வேண்டிக் கேட்போர் எத்தனை பேர்?

தூண்டும் அவரது பண்பு கொண்டு,
தூயர் ஆவோர் எத்தனை பேர்?

மாண்டும் மடிந்தும் விழுவோர் கண்டு, 
மனதை மீட்போர் எத்தனை பேர்?

தோண்டும் குழியிலும் வேண்டிக் கொண்டு,
தூக்கப் போவோர் எத்தனை பேர்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

மறைபொருள்!

நல் மொழி:யோவான் 16:25 

25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

நல்வழி:

புரியாருக்கு இறையின் வாக்கு,
பொழுது போக்கும் புதிர். 
தெரிவாருக்கு, அத்திருவாக்கு,
தெளிவு ஆக்கும் கதிர்.
விரிவாய்க் கேட்க விரும்பாருக்கு,
விண்ணும் மண்ணும் எதிர்.
அறிவாய் நண்பா, இறை நோக்கு;
அகலும் நெஞ்சின் அதிர்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

யோவான் 16: 23-24.

இறை வழி:

என்ன கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
என்றறியாதே கேட்கிறேன்.
சொன்ன உம் திரு வாக்கும் பிடித்தேன்.
சொற்படி மகிழ்வே கேட்கிறேன்.
சின்ன பிள்ளை அழுவது போல் நான்,
சிணுங்கியவாறே கேட்கிறேன்.
இன்ன விருப்பம் வேறு நான் கேளேன்; 
இறையின் மகிழ்வே கேட்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

நிலை வாழ்வுற்ற தம்பியே, வாழ்க!

நிலை வாழ்வுற்ற தம்பியே, வாழ்க!

இலையுதிர் காலம் இதுவன்றோ?

இப்படிச் சொன்னது நீயன்றோ?

சிலைபோல் சாய்ந்தாய் ஏனின்றோ?

செய்தியால் விழுவது நான் அன்றோ?

நிலை வாழ்வளிப்பது இறையன்றோ?

நேர்மை தரும் உன் உறவன்றோ?

அலைகிற எனக்கும் வரும் என்றோ?

அதுவரை அழுவது தான் நன்றோ?

-கெர்சோம் செல்லையா.

வலியும் வாழ்வும்!

வலியும் வாழ்வும்!

இறை மொழி: யோவான் 16:21-22. 

21. ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

22. அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

இறை வழி:

பேற்றின் நாளில் பெறுபவள் துடிப்பாள்;
பெற்ற பின்போ மகிழ்வை பிடிப்பாள்.
கூற்றின் பொருளை உணரப் படிப்பாய்.
கொடுமை எனினும் விழுங்கக் கடிப்பாய் .
தூற்றும் பழிச்சொல் கசக்கும் என்பார்.
தூயரோ அதனை விரும்பித் தின்பார்.
மாற்றும் இறையின் விருந்து உண்பார்,
மருந்தும் உண்டார், நீ முன் பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

துயரம் மகிழ்ச்சியாக்கும்!

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

இறை மொழி: யோவான் 16:19-20.

19. அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?

20. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

இறை வழி:

துயரத்தை மகிழ்ச்சியாக்கும்
தூயரே துணையிருக்க,
அயர்விலும் அஞ்சிடேன் நான்;
அவரே எனக்கு எல்லாம்.
இயற்கையைப் படைத்து ஆளும்,
இறைவனே எனையணைக்க,
புயல்களும் அடங்கி நிற்கும்;
போதுமே அவர் சொல்லாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.