1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
என்றும் நிலைத்த இறையருளாலே என் நிலையாமையில் அஞ்சேனே. அன்பின் உள் எனை நடத்துவதாலே, அடியன் அளவில் மிஞ்சேனே. நின்று நிலைக்கும் அவர் வாக்காலே, நீடிய வாழ்வில் இணைவேனே. நன்றாய் நடத்தி நல்லீவருளும், நல்லிறையருகில் அணைவேனே!
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
இறை வழி:
தொட்டு, தொட்டுப் பார்த்தவர் துணையாக இருந்தவர், விட்டு, விட்டுப் போகிறார். விண் மகனோ வருந்தவில்லை. கட்டு கட்டாய் இணைத்தவர், கண் மணியாய்க் காப்பவர், கெட்டு விழக் கைவிடார்; கேட்டும் ஏன் திருந்தவில்லை?
29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.
30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
இறை வழி:
தந்தையிலிருந்து வந்தார் யாவரும் மைந்தர். தவறோ சரியோ, வாழ்கிறார் கண் முன்னர். வந்தார் கூட்டத்தில் இயேசு இறை மைந்தர். வாக்காய் வாழ்ந்த அவரரோ தூய பொன்னர். முந்தைய நிகழ்வை அறிந்தவர் மண் மைந்தர். முரண் கருத்தே வரும் அவர் பின்னர். பிந்தைய காலம் காண்பவரோ இறை மைந்தர். பேரரசிணைக்கும் அவரே, நம் மன்னர்! ஆமென். கெர்சோம் செல்லையா.