இறை நோக்கு!

இறை நோக்கு!

இறை மொழி: யோவான் 17:4-5.

இறை வழி: 


நோக்கம் உண்டு தெய்வப் படைப்பில்;

நோக்கி நம்மைக் கொடுப்போமா?

ஆக்கம் கண்டு, அன்பை விதைப்பின், 

அறுவடை மேன்மை, எடுப்போமா? 

வீக்கம் கொண்ட வீண் விருப்பில்,

விளைவது தீமை, நினைப்போமா?

போக்கை மாற்றும்; புனிதனை நாடும்;

புகழ்ச்சி தருவார், அணைப்போமா?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

இயேசுவின் இறைவேண்டல்!

இயேசுவின் இறைவேண்டல்!

இறைமொழி:

யோவான் 17: 1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இறைவழி:

வேண்டல் செய்யும் இறைமகன் பாரீர்.

விண்ணப்பங்கள் எவை எனப் பாரீர்.

ஆண்டவர் அளிக்கும் வாழ்வும் பாரீர்.

அதற்குக் கூறும் வழியும் பாரீர்.

நீண்ட நெடிய வேண்டலைப் பாரீர்.

நிலையற்றோர்க்கே, என்றும் பாரீர்.

மாண்டல் அல்ல, மாட்சிமை பாரீர்;

மன்னனோடு வாழ்வோம், வாரீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

45 ஆண்டுகள் முன்!

45 ஆண்டுகள் முன்!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் 

நம்ப மறுத்த என்னிடத்தில், 

ஏற்க வைத்துத் திருத்திடவே, 

இறையீந்தார் திருமறை.

ஊர் உறவின் கண்கள் முன்,

ஒன்று மற்று இருந்தவனை 

தோற்க விடாது நிறுத்திடவே, 

தொடர்கிறார் அருள் மழை!

-கெர்சோம் செல்லையா. 

துன்புறும் இவ்வுலகில்!

துன்புற்ற இவ்வுலகில்!

இறை மொழி: யோவான் 16: 33.

33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இறை வழி :

துன்புற்ற இவ்வுலகில், துணையாகும் இறையே,

துணிவும் உன் ஈவே, தொடர்ந்தெனை நிறையே.

இன்புற்று வாழுங்கால் எண்ணுவேன் குறையே;

யானும் உனைப் பார்த்து, உதவுவேன் முறையே.

அன்பற்ற மனிதர்களாய் வாழ்பவர்கள் கறையே.

அறிந்தும் நடவார்கள், அடைவார்கள் அறையே.

தென்பட்ட மக்களுக்குத் தேவை நல்லுரையே.

தெரிவிக்க அடிக்கிறேன், இறையரசு பறையே!

ஆமென்.

கெர்சோம் செல்லையா.

May be an image of boat, sail and text that says 'These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: the but be of good cheer; I have overcome the world. John 16:33'

Like

Comment

Share

நிலை வாழ்வு!

நிலைவாழ்வு!

என்றும் நிலைத்த இறையருளாலே
என் நிலையாமையில் அஞ்சேனே.
அன்பின் உள் எனை நடத்துவதாலே,
அடியன் அளவில் மிஞ்சேனே.
நின்று நிலைக்கும் அவர் வாக்காலே,
நீடிய வாழ்வில் இணைவேனே.
நன்றாய் நடத்தி நல்லீவருளும்,
நல்லிறையருகில் அணைவேனே!

கெர்சோம் செல்லையா.

நிலைத்தவை!

நிலைத்தவை எவை?

நிலைத்தவை எவையென மனிதர் கேட்டார்.

நெஞ்சில் வைக்க என்னென்பேன்?

குலைத்திட முயன்றவர் மறுக்க மாட்டார்.

கொடுக்கும் இறை அன்பென்பேன்.

மலைத்திடச் செய்யும் மற்றொன்றென்றார்.

மானிடர் மீட்பு தான் என்பேன்.

விலைக்கு இல்லை, விரும்பித் தந்தார்;

விண் வாக்கிலே நான் கண்டேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பி.கு. நிலைத்தவை எவை?

1. இறை அன்பு/அருள்

2. இறை அரசு/மீட்பு/வாழ்வு

3. இறை வாக்கு

பிரிவு!


பிரிவு!
இறை மொழி: யோவான் 16:31-32.

31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.

32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

இறை வழி:

தொட்டு, தொட்டுப் பார்த்தவர் 
துணையாக இருந்தவர், 
விட்டு, விட்டுப் போகிறார்.
விண் மகனோ வருந்தவில்லை.
கட்டு கட்டாய் இணைத்தவர்,
கண் மணியாய்க் காப்பவர்,
கெட்டு விழக் கைவிடார்; 
கேட்டும் ஏன் திருந்தவில்லை?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 
  



 

யோவான் 16:29-30.

இறையிலிருந்து வந்தவர்!

இறையிலிருந்து வந்தவர்!

இறை மொழி: யோவான் 16:29-30. 

29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.

30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

இறை வழி:

தந்தையிலிருந்து வந்தார் யாவரும் மைந்தர்.
தவறோ சரியோ, வாழ்கிறார் கண் முன்னர்.
வந்தார் கூட்டத்தில் இயேசு இறை மைந்தர்.
வாக்காய் வாழ்ந்த அவரரோ தூய பொன்னர்.
முந்தைய நிகழ்வை அறிந்தவர் மண் மைந்தர்.
முரண் கருத்தே  வரும் அவர் பின்னர். 
பிந்தைய காலம் காண்பவரோ இறை மைந்தர். 
பேரரசிணைக்கும் அவரே, நம் மன்னர்!
ஆமென். 
கெர்சோம் செல்லையா. 

கெர்சோம் செல்லையா. 

யோவான் 16: 27-28.

இறை வழி:


இறை அனுப்ப இயேசு வந்தார்;

இறையன்பை காட்டித் தந்தார்.

நிறைவாக்கும் கொண்டு வந்தார். 

நேர்மையையும் ஊட்டித் தந்தார்.

முறை என்ன? சொல்ல வந்தார். 

முழு அன்பே, மூட்டித் தந்தார். 

குறை மனிதர் கேட்க வந்தார். 

கொண்ட பேறு, நீட்டித் தந்தார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதி ஒன்றே!

சாதி ஒன்றேயாம்!

எல்லோரும் எல்லாத் தொழிலும் செய்யவில்லையா?

இறைவேண்டும் வாக்குகளும் பெய்யவில்லையா?

பொல்லார் புகாதபடி வீட்டினையும் காக்கவில்லையா?

புறம் சென்று வாங்கி விற்கவும் நோக்கவில்லையா?

மல்லுக் கட்டாமல், மறைவிலுடல் துடைக்கவில்லையா?

மாற்றாரையும் இதுபோல் இறை படைக்கவில்லையா?

சொல்லுங்கள் இப்போது, நாம் யார் என்ன சாதியென்று.

சொந்தம், ஓர் உறவு, ஒரே சாதி; இதுதான் நன்று!

-கெர்சோம் செல்லையா.

May be a doodle