குற்றச்சாட்டு மாறுவதேன்?

குற்றச்சாட்டு மாறுவதேன்?

இறை மொழி: யோவான் 18: 29-32.

29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.

30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

31. அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.

32. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.

இறை வழி:

இறைப்பழி சுமத்தி இயேசுவைக் கொல்ல

இவர்கள் முயன்று எழுந்தாலும்,

அறையும் படிக்குத் தீர்ப்பைச் சொல்ல

அது போதாதென அறிவார்கள்.

விரைவில் அழிவு வருவதைக் காட்டும்,

வியத்தகு கண்கள் இழந்தாரும்,

அரசைக் கவிழ்க்க ஆட்களைக் கூட்டும்

அநீதிப் பழிதான் தெரிவார்கள்!

ஆமென்.

May be an image of 6 people and text that says 'GoodSalt.com Used with permission.'

எது தீட்டு?

தீட்டு!

இறை மொழி: யோவான் 18:28.

28. அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.

இறை வழி:

கொல்லத் துடிப்பதே தீட்டு;

கொடுமை செய்தலே தீட்டு.

வெல்லும் பொய்யே தீட்டு;

விளையும் தீங்கும் தீட்டு.

சொல்லில் உண்டு தீட்டு;

சொல்பவர் நெஞ்சே தீட்டு.

பல்வகை கண்டேன் தீட்டு,

பாடும் நானே தீட்டு!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Not Wanting to Be Defiled! -John 18:28-32 NLT-'

மறுத்தலும், பொறுத்தலும்!

மறுத்தலும் பொறுத்தலும்!

இறை மொழி: யோவான் 18:24-27.

24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

25. சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

26. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.

27. அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.

இறை வழி:

முன்னாள் இயேசு சொன்னபடியே

மும்முறை பேதுரு மறுத்தார்.

அந்நாள் அதனை அறிந்த இயேசு,

அன்பில் அவரைப் பொறுத்தார்.

இன்னாள் இதுபோல் ஒருவரிருந்தால்,

யார்தான் அவரைச் சேர்ப்பார்?

பொன்னாய் மாறும் நிலை எந்நாளோ?

பொறுப்பீர், இறை ஏற்பார்!

ஆமென்.

May be an image of bird

தவறுணர்த்தும் பதில்!

தவறுணர்த்தும் பதில்!

இறை மொழி: யோவான் 18:21-23.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

இறை வழி:

ஏது எதுவும் இல்லாதிருந்தும்,

ஏன் காவலர் அடித்தார்?

தீது இது; தெரியா மனிதர்,

தீமையைத்தான் பிடித்தார்.

வாது செய்யும் நோக்குடையார்,

வரிந்து கட்டத் துடிப்பார்.

தூது என்னும் இறைமகனோ,

தவறுணர்த்திக் கொடுப்பார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus answered him, Iflhave spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me? John 18:23 KJV'

ஒளிவு மறைவில்லை!

ஒளிவு மறைவில்லை!

இறை மொழி: யோவான் 18: 19-21.

19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

இறை வழி:

தெளிவு தேடும் என் நாட்டாரே,

தெய்வ வாக்கு கேளுங்கள்.

ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை;

உளம் திறந்து கேளுங்கள்.

பொழிவு நாடும் என் வீட்டாரே,

பொய்மை விட்டு வாழுங்கள்.

அழிவு கண்டு அழுபவர் உண்டு,

அன்பில் மீட்டு வாழுங்கள்!

ஆமென்.

May be an image of text that says 'There is no hidden agenda in my life. I want a good life with good deeds. -Venkatesh SR SR Your uote.in'

அவன் நானில்லை!

அவன் நானில்லை!

இறை மொழி: யோவான் 18:17-18.

17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.

18. குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

இறை வழி:

நீயும் இயேசுவின் அடியான்தானே?

நேர்மையோடு பதில் சொல்வாய்.

பேயும் கூட இதனைச் சொல்லும்;

பிறகு எதற்கு மறுத்தாய்?

தேயும் வாழ்வில் உண்மை வேண்டும்;

தெரிந்தும் நீ பொய் சொன்னாய்.

ஆயும் ஆவியர் அனலில் புகுந்து,

அடியோடுன்னை வெறுப்பாய்!

ஆமென்.

May be an image of 4 people

இன்னொரு அடியார்!

இன்னொரு அடியார்!

இறை மொழி: யோவான் 18:15-16.

15. சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

16. பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

இறை வழி:

இன்னொரு அடியான் என்றே கூறி,

யோவான் யாரை மறைக்கிறார்?

தன்னை மறைத்துக் காட்டும் நற்பணி

தாழாதுயரச் சிறக்கிறார்.

என்னில் உண்டோ என்று பார்த்தும்,

இழிவெண்ணத்தைச் சிதைக்கிறார்.

முன்னால் நிற்பவர் ஏற்காரெனினும்,

முதற்கண் என்னில் விதைக்கிறார்!

ஆமென்.

May be an illustration

ஒருவரைக் கொல்லல்!

ஒருவரைக் கொன்று..

இறை மொழி: யோவான் 18:12-14.

12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.

14. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

இறை வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காப்பதும்,

ஊரை அழித்து நாட்டை மீட்பதும்,

பெருமதி பெறாத பேதையர் கருத்து;

பிழை உணர்ந்து உள்ளம் திருத்து.

இருவரோ மூவரோ எண்ணிக்கை அல்ல;

யாவரைக் காப்பதே இறையின் நல்ல,

விருப்பெனக் கண்டு பணிவாய் இன்று;

விண் அருளில் வாழ்வோம் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

வாள்!

வாள் !


இறை மொழி! யோவான் 18:10-11.



10. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.

11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

இறை வழி:

வீழ் என்று நினைப்போர் முன்பு, 
விழேன் என்று எதிர்ப்பதற்கு,
வாள் எடுக்கும் மனிதர் உண்டு.
வரலாறு கதை சொல்கிறது.
சூழ் என்று அணைக்கும் அன்பு,
சொல்லும் மீட்பு விதிப்பதற்கு, 
தாள் பணிதல் புனிதர் பண்பு;
தாழ்மை ஆவி வெல்கிறது!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா. Activate to view larger image,

Image preview

Activate to view larger image,

அழகும், பேரழகும்!

அழகும், பேரழகும்!

ஓடுதல் ஆற்றிற்கு அழகு.

ஒடுங்குதல் ஊற்றிற்கழகு.

பாடுதல் பறவைக்கு அழகு.

பாய்தலே விலங்கிற்கழகு.

கூடுதல் மனிதர்க்கு அழகு;

கொடுப்பதே நமக்கழகு.

தேடுதல் அறிவியல் அழகு.

தெரியும் இறை, பேரழகு!

-கெர்சோம் செல்லையா.

May be an image of deer