கும்பலின் நேர்மை!

கும்பலின் நேர்மை!

இறை மொழி: யோவான் 19:14-16

14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

இறை வழி:

ஆட்டமும் அகந்தையும் அள்ளியே விட்டு,

ஆள்பவர் நடப்பது கடுமையாம்.

கூட்டமும், கூச்சலும் கூறுதல் கேட்டு,

கொடுக்கும் தீர்ப்போ கொடுமையாம்.

வேட்டைக்காரரை நடுவாராய் வைத்து,

வேண்டி நாம் கிடப்பது மடமையாம்.

ஓட்டைப் பைகளை உடனடி தைத்து,

உண்மை சேர்ப்பதே கடமையாம்!

ஆமென்.

May be an image of one or more people

செயல்படாத நல்லெண்ணம்!

விருப்பமுண்டு, ஆனால்!

இறை மொழி: யோவான் 19:12-13.

12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

இறை வழி:

அன்றைய பிலாத்து ஆளுநர் போன்று,

அவதிப்படும் பல மனமுண்டு

கொன்றிடத் துடிக்கும் கூட்டம் சென்று,

கொடுக்க மறுக்கும் கனவுண்டு.

சிந்தையில் மட்டும் நினைப்பது அன்று;

செய்யாதிருந்தால் கடனுண்டு.

நன்மை எண்ணி நடத்திடு நன்று;

நல்லிறை, உன் உடனுண்டு!

ஆமென்.

May be an image of text that says 'THOSE WHO DO GOOD DEEDS WILL RISE TO A RESURRECTION OF... Life te John 5:29 Knowing-Jesus.com'

உரிமை!

ஆட்சியுரிமை!

இறை மொழி: யோவான் 19:10-11.

10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

இறை வழி:

ஆளும் உரிமை ஆண்டவர் தருவது.

அறிந்து ஆள்பவர், யார் இங்கே?

வாழும் உரிமை அனைவர்க்குரியது.

வழி மறுப்பதால், போர் இங்கே.

தாழும் நிலைக்குத் தள்ளிக் கெட்டது

தன்னலமாகும், கேள் இங்கே.

நீளும் துன்பம் முடிக்கப்பட்டது,

நேர்மையிலாகும்; வாழ் இங்கே!

ஆமென்.

No photo description available.

கொலை வெறி!

கொல்லத் துடிக்கும் வெறி!

இறை மொழி: யோவான் 19:6-9.

6. பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.

7. யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

8. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

9. மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

இறை வழி:

கொல்லத் துடிக்கும் வெறியுண்டு;

கொலைக்கோ ஏது எதுவுமில்லை.

சொல்லும் வாயில் பொய்யுண்டு;

சொற்கேட்பவரோ பொதுவில்லை.

நல்லறிவென்பதில் அன்புண்டு.

நம்மில் பலரோ கற்கவில்லை.

மெல்லுரையாயினும் நெறியுண்டு.

மேலோர் வழியது, தோற்பதில்லை!

ஆமென்.

May be an image of text that says 'JESUS: SON OF GOD? Can Jesus be both God and man?'

மனிதன்!

மனிதன்!

இறை மொழி: யோவான் 19:5.

5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

இறை வழி:

அறிவுக்கப்பால் ஆளும் தெய்வம்

அன்பு வடிவில் புவி வந்தார்.

இறையருள் வாக்கை நிறைவாக்கும்,

ஈடிலா பணிக்கு உரு தந்தார்.

மரியாள் மகனாய் மானிடர் கண்டும்,

மக்களை மீட்க இறை வந்தார்.

புரியாதவர்கள் கண்கள் திறக்கும்;

புனித இயேசு தனைத் தந்தார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus came out, wearing the crown of thorns and the purple robe, and Pilate said to them Behold, the Man! John 19:5 Knowing-Jesus.com wing-Jesus.com'

குற்றமற்றவரை அடிப்பது!

குற்றமற்றவரை அடித்தல்!

இறை மொழி: யோவான் 19:1-4.

1. அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.

2. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:

3. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

4. பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.

இறை வழி:

குற்றமற்றவர் என்பதை அறிந்தும்,

கொடுமைப்படுத்தி அடிப்பதா?

உற்ற உறவில் ஒருவர் பட்டால்,

ஊரைத் திரட்டி துடிப்பதா?

பெற்ற பதவி துயர் தரத்தானா?

பிறருக்குரிமை இல்லையா?

சற்று நேரம் சமநிலை மறந்தோர்,

சாய்ந்த கதையும் சொல்லவா?

ஆமென்.

May be a doodle

யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?

யாரைத் தேர்வு செய்கிறோம்?

இறை மொழி: யோவான் 18:39-40.

39. பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

இறை வழி:

திருடரும் தூயரும் தேர்வில் நின்றால்,

திருடரே வெல்கிறார்; காணுகிறோம்.

அறிஞரும் மடையரும் போட்டியிட்டால்,

அறிஞர் தோற்கிறார்; நாணுகிறோம்.

உருப்பட மாட்டா உலகோர் வென்றால்,

ஊர்தான் அழியும்; கோணுகிறோம்.

இறையறிவில்லா நிலைமை இதுதான்;

எனவே, இயேசுவைப் பூணுகிறோம்!

ஆமென்.

May be an image of 1 person and text

உண்மை!

உண்மை என்றால் என்ன?

இறை மொழி: யோவான் 18: 38.

38. அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

இறை வழி:

அறிய விரும்பும் குழந்தையைப் போன்று,

ஆளுநர் பிலாத்து கேட்டாலும்,

தெரிய முயன்றிட வில்லை என்று,

தெய்வ நூல் சொல்கிறது.

பெரிய பதவியைப் பெற்றவர் இன்று,

பேர் புகழ்ச்சி தொட்டாலும்,

வறிய மனிதர் மெய்யே நன்று;

வாய்மை தான் வெல்கிறது!

ஆமென்.

No photo description available.

உண்மையின் அரசர்!

உண்மை!

இறை மொழி: யோவான் 18:37.

37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

இறை வழி:

இங்கே பலரிடம் தேடிப் பார்த்தேன்;

இல்லாதிருப்பது உண்மையே.

எங்கே இருக்கும் ஓடிப் பார்த்தேன்;

யாவும் இங்கு பொய்மையே.

மங்கும் கண்ணை மூடிப் பார்த்தேன்;

மனதில் வந்தார் ஒருவரே.

அங்கே உண்மை, கோடி பார்த்தேன்.

அவர்தான் இயேசு அரசரே!

ஆமென்.

May be an image of chess and text that says 'The King of Truth -John 18:37 NLT- heartlight.org'

புவி அரசரில்லை!

புவியரசு இல்லை!

இறை மொழி: யோவான் 18: 33-36.

33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.

34. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

35. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.

36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

இறை வழி:

பாண்டிய, சோழ, சேரர் போன்று,

பாரினில் அரசையும் தரவில்லை.

தோண்டிய செல்வம் குவித்து நின்று,

துரை போல் ஆளவும் வரவில்லை.

வேண்டிய மனிதர் விடுதலைக்கென்று,

விண்விட்டு இயேசு புவி வந்தார்.

தாண்டிய போதும் பொறுப்பார் இன்று;

தரணிக்கு மாதிரி அவர் தந்தார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Pilate asked Him, Are You the King of the Jews? John 18:33'