இறையறிவு!
நற்செய்தி: யோவான் 8:54-55. 54.
இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
நல்வழி:
இறை அறிவுள்ளவர் நீவிர் என்றால்,
ஏன் இறுமாப்பு கொண்டுள்ளீர்?
குறை குற்றங்கள் பிறரில் கண்டால்,
குறுமதி உணவே உண்டுள்ளீர்.
முறை தவறாமல் முழங்கால் நின்றால்,
முதலில் உள்வினை கண்டிடுவீர்.
நிறைவறிவாகிய நேர்மை வந்தால்,
நிமிர்ந்து, நன்மை பண்ணிடுவீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.