நம்மை  விடவும் நான்கு கற்றார்,

நன்றாய் ஆய்ந்து அறியினும்,

தம்மை மீட்பார் தன்மை அறியார்;

தவறி அரண்மனை போகிறார்.

செம்மை அறிவு பிறகு பெற்றார் 

செல்ல வாக்கு உரைப்பரும்,

பொம்மை போல போகாதிருந்தார்;

புறக்கணிப்பால் நோகிறார்!

(மத்தேயு 2)

ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் நிறைவை யார்தான் விடுவார்?

வையம் இறங்கும் ஏதென்ன?

நான் என்கிறத் தீமை கொள்ளும்,

நாட்டவர் மீள வழியென்ன? 

தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;

தவறா இறை மொழியென்ன?

(யோவான் 3:16}.