ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் விடுத்து எவர்தான் வருவார்?

வையம் இறங்கிட ஏது என்ன?

நான் என்கிற தீவினை பெருத்து,

நானிலம் கெட்டு விழுந்ததினால்,

தான் பெற்ற மக்களை மீட்க,

தந்தையன்பாய் மகனளித்தார்!

(யோவான் 3:16)

May be an image of 2 people

புதிய ஏற்பாடு!

ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு;

உரைப்படி வாக்கும் பிறந்தது.

எவ்விதமான பகட்டும் தவிர்த்து,

எளிமையின் ஆவி புரிந்தது.

கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு;

கன்னியின் நெஞ்சோ திறந்தது.

இவ்விதமான திருமகன் பிறப்பு,

யாவற்றிலுமே சிறந்தது!

(லூக்கா 1)

No photo description available.

வருவார் என்கிற வாக்கின்படியே,

வையத்தாரிறை காத்திருந்தார்.

தருவார் அவரும் தகுந்த அரசே;

தாமதமாயினும் பார்த்திருந்தார்.

இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,

ஏனோ இறைவன் பேசவில்லை.

ஒருவரும் அறியா அந்த மௌனம்,

உடைக்குமறிவும் வீசவில்லை!

May be an image of text