இறைமகன்!

செய்யுட் செய்தி!
இறை மைந்தன்!செய்தி:யோவான் 11:27. 

செய்யுள்:


பல்லுயிர் படைத்துப் பரிவுடன் காக்கும்,  

பரத்தின் அரசே இறைவன். 

நல்லருள் வாக்கின் வலுவால் மீட்கும்,

நன்மையின் உருவே இறைவன். 

இல்லையென்பாரும் இரக்கம் சேர்க்கும்,

இனிய தந்தையே இறைவன்.

எல்லா இனத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும்,


இயேசு மைந்தனே இறைவன்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.