யோவான் 11:5-7

  1. காலம் தாழ்ந்து வருபவர் என்று
  2. கடவுளை சிலபேர் பார்க்கிறார். 
  3. ஓலம் கூட உச்சியில் சென்று
  4. ஒலிக்கவே பலரும் ஏற்கிறார்.
  5. வேலம் பட்டைக் கருத்து தின்று, 
  6. வீணாய் நிற்பவர் தோற்கிறார்.
  7. ஞாலம் மீட்க, நீட்டம் நன்று;
  8. நம்பின், நல்லிறை சேர்க்கிறார்! 
  9. ஆமென். 
  10. -கெர்சோம் செல்லையா.