யோவான் 11:4

இறை மாட்சி!


எதைச் செய்தாலும் இறையாட்சிக்கு,

என்று வாழ்தல் கிறித்தவம். 

அதன் விளைவும் அவர் மாட்சிக்கு, 

அமைய விரும்பின் நெறித்தனம்.  

இதைத் துறந்த இன்றையப் போக்கு,

எதனால் என்றால், வெறித்தனம். 

விதைக்கும் முன்னே, விளைவை நோக்கு;

வேண்டாம் என்றும் நரித்தனம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.