இறை அதிசயம்!

இறை அதிசயம்!
வாக்கு: யோவான் 10:41-42.

வாழ்வு:


அருட்பணி ஆயிரம் புரிந்தாலும், 

அன்பில் சேர்ந்து திரிந்தாலும்,

விருப்புடன் மனிதர்கள் தேடுவது,

விதியை மாற்றும்  அதிசயமே!

திருப்பணித் தளங்களில் காணுகிற,

தேய்ந்தோர் நலத்தைப் பேணுகிற 

பெருந்திரள் கூட்ட  அருஞ்செயல்கள், 

புரிவாய், இறை அதிசயமே!


ஆமென். 

கெர்சோம் செல்லையா.