இறை மைந்தன்!

இறை மைந்தன்!
வாக்கு: யோவான் 10:34-36.


34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?  

வாழ்வு:  


பிறந்து, வளர்ந்த, வாழ்வும் சொல்லும்,

பிறப்பில் இயேசு இறைமைந்தன். 

இறந்து, எழுந்த, உயிர்ப்பும் சொல்லும்,

இவரே நமக்கு இறைமைந்தன். 

மறந்து கூடத் தீமையும் எண்ணார்;

மாட்சி வடிவே இறைமைந்தன்.

துறந்து வந்த விண்ணிலும் சேர்ப்பார்;

தூயர் விடிவே இறைமைந்தன்! 


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.