இறை நிந்தை!

இறை நிந்தை!


வாக்கு: யோவான் 10: 31-33.  

  1. 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
  2. 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
  3. 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

வாழ்வு: 


சொல்லால் வெல்ல இயலாதாரே,

சுமத்திச் செல்வார் வீண்பழி. 

கல்லால் அடிக்கவும் துணிகிறாரே,

காணுமோ, நம் கண் விழி?

நல்லார் தெரிந்தும் நடக்கிறாரே;

நன்மை மட்டும், அவர் மொழி.

எல்லாத் தீங்கும் அழித்தொழிக்கும்,

இறைவழியே நல் வழி! 

ஆமென்.

 
-கெர்சோம் செல்லையா.