உயிர் மூச்சு!

உயிர் மூச்சு! 
வாக்கு: யோவான் 10:17-18. 
17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.  
வாழ்வு:


என்று போகும், எப்படிப் போகும்,

என்றறியா உயிர் மூச்சை,

அன்று இயேசு அளித்த வாக்குள்,

அடைத்தறிதல் நலமாம். 

இன்று வாழும் நமது வாழ்வும்,

இறை அருளும் கொடையாய்,

நன்கு பேண நாம் நினைத்தால்,

நலம் என்றும் நிலையாம்! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.