அறிவோம்!

அறிவோம்!
வாக்கு: யோவான் 10:14-15. 


14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.  


வாழ்வு:


இறைவன் நம்மை அறிவது போல, 

இறையை அறிவது அறிவாகும். 

பிறவியெடுத்த மனிதர் எவரும்,

புரிந்து கொள்வது நெறியாகும். 

முறையாய் நாமும் கற்கும் போது,

முதலில் தெரிவது குறையாகும்.

திறவாக் கதவும் திறந்து அருளும்;

தெய்வ அன்பில் நிறைவாகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.