நினைப்போமா?
புலிகள் உண்பது மகிழ்ச்சி என்ற,
புதிய பொருளியல் ஆட்சிகளில்,
வலியில் மடியும் மான்களை மீட்க,
வழி ஏதேனும் நினைத்தோமா?
எலிகள் என்று எண்ணப்படுகிற,
எளிய மக்கள் வீழ்ச்சிகளில்,
பலியைத்தானே பார்க்கின்றீர்கள்.
பலியாவோரை நினைப்போமா?
-செல்லையா.