நல்லாயன் !

வாக்கு: யோவான் 10:11.

வாழ்வு:


ஐந்தறிவுள்ள ஆட்டைக் காக்க,

ஆறறிவாளன் உயிர் விட்டால்,

எந்த அறிஞர், இங்கு சொல்வார்,

அவனோர் ஆட்டின் நல்லாயன்?


மைந்தனிறையோ இவர் போலல்ல;

மனித வடிவாய்த் தனையிறக்கி, 

சொந்த உயிரால் நம்மை மீட்டார்.

சொல்வோம், இவரே நல்லாயன்!


ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.   

வாசல்!

வாசல்!

வாக்கு: யோவான் 10:7-10.

7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

வாழ்வு:

ஆட்டை அடைக்கும் தொழுவம் கண்டேன்.

அதற்கொரு வாசல் வழியும் கண்டேன்.

கோட்டை அரண்போல் காப்பதும் கண்டேன்.

கோடி உயிர்கள் மீட்பதும் கண்டேன்.

கேட்டை வெறுக்கும் மனிதனும் கண்டேன்.

கெடாமல் திருத்தும் புனிதனும் கண்டேன்.

வீட்டை மாற்றும் இயேசுவைக் கண்டேன்.

விண் அகத்தின் வாசலும் கண்டேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.