ஆட்டின் அறிவு!

ஆட்டின் அறிவு!


வாக்கு: யோவான் 10:3-4. 


3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


வாழ்வு:


ஆடும் கூட ஆயனை அறியும்,

அவன் குரல் கேட்டு நடக்கும். 

ஓடும் திருடன் ஓசை கேட்டும்,

உடன்பட மறுத்துக்கிடக்கும்.

தேடும் தெய்வக் குரலழைத்தும்,

தெரியாதது போல் நடக்கும்,

வாடும் மனிதப் பெருங் கூட்டம்,

வறுமையில்தான் கிடக்கும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.