யோவான் 9:18-21.

எப்படி நிகழ்ந்தது?

நல்வழி: 


எப்படி இந்த மாற்றம் வந்தது?

யாரால் இவரது கண் திறந்தது?

அப்படி வினவி தெளிவுறுவது,

ஆன்றோருக்கு, அறிவு, அழகு. 

இப்படி அறிய விரும்பாதிருப்பது,

ஏசிப்பேசி, இகழ்ந்துரைப்பது, 

செப்படி வித்தைக்காரரின் தவறு;

சேதம் வருது, விட்டு விலகு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பார்க்கும் கோணம்!

பார்க்கும் கோணம் பாரீர்!
நற்செய்தி: யோவான் 9:17. 

17. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.  

நல்வழி:

மனிதனாய்ப் பார்த்த கண்கள் அன்று,

மறுபடி இயேசுவைப் பார்க்கையிலே,

புனிதனாகிய இறை வாக்கினன் என்று,

புதிய நோக்கில் பார்ப்பதும் பார்.

இனிமையான இறைவாக்கினன் இன்று,

 இன்னும் உயர்ந்து நிற்கையிலே,

கனியுமந்த காலம் வருமேயென்று,

காத்திருப்பார் ஆர்ப்பதும் பார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஆன்ம அறிவு!

ஆன்ம அறிவு!

நற்செய்தி: யோவான் 9: 12- 16.

12. அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.13. குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.14. இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.15. ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.16. அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.

நல்வழி:

சடங்குகள் வழியாய் இறையருள் நாடும்,

சமயத்தவர்கள் பலர் உண்டு.

உடம்பினை ஒடுக்க, உரக்கப் பாடும்,

ஊர்ப்பாடகர்கள் சிலர் உண்டு.

அடங்கா நெஞ்சை அடக்கி ஆளும்,

ஆன்ம அறிவு எதில் உண்டு?

கிடங்குகள் நிரப்பும், கிறித்து வாழும்,

கேடிலா அன்பு அதில் உண்டு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.