இயேசுவின் எழுத்து!
நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
நல்வழி:
தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,
தவற்றைச் சுட்டிக் காட்டலையா?
உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,
ஊரை உணர்த்தி ஓட்டலையா?
திரையில் தோன்றா ஊழியர் உண்டு;
தெய்வ வாக்கைப் பரப்பலையா?
விரைவில் வருகிற நடுவர் கண்டு,
விரும்பும் தூய்மை நிரப்பலையா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.