இயேசு எழுதியது!

இயேசுவின் எழுத்து!

நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

நல்வழி:

தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,

தவற்றைச் சுட்டிக் காட்டலையா?

உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,

ஊரை உணர்த்தி ஓட்டலையா?

திரையில் தோன்றா ஊழியர் உண்டு;

தெய்வ வாக்கைப் பரப்பலையா?

விரைவில் வருகிற நடுவர் கண்டு,

விரும்பும் தூய்மை நிரப்பலையா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.