ஒரு முதியவரின் ஆவல்!
பாட்டன் பாட்டி பேர்புகழ் உண்டு.
பூட்டன் பூட்டி நேர்மையும் உண்டு.
ஏட்டில் எழுதும் நாட்டமும் உண்டு.
கேட்டுப் பாடும் கூட்டமும் உண்டு.
கோட்டை போன்ற குடும்பம் அன்று;
வேட்டை ஆடுதே இடும்பில் இன்று.
வீட்டில் உரைத்தேன் கேட்பாரென்று.
ஓட்டைக் காது; அடைப்பது நன்று.
-கெர்சோம் செல்லையா.