குடும்பம் – அன்று, இன்று!

ஒரு முதியவரின் ஆவல்!

பாட்டன் பாட்டி பேர்புகழ் உண்டு.

பூட்டன் பூட்டி நேர்மையும் உண்டு.

ஏட்டில் எழுதும் நாட்டமும் உண்டு.

கேட்டுப் பாடும் கூட்டமும் உண்டு.

கோட்டை போன்ற குடும்பம் அன்று;

வேட்டை ஆடுதே இடும்பில் இன்று.

வீட்டில் உரைத்தேன் கேட்பாரென்று.

ஓட்டைக் காது; அடைப்பது நன்று.

-கெர்சோம் செல்லையா.