இகழ்வாய்ப் பார்த்தல்!

இகழ்வாய்ப் பாராதீர்!


நற்செய்தி: யோவான் 7:52-53.  

நல்வழி:

கல்வி, கேள்வி, பொருளியல் வாழ்வில்,

கரை சேராத கலிலியரை,

நல்லறிவாளர் வரிசையில் வையார்,

நன்கு கற்ற அந்நாட்டார்.

எல்லோருக்கும் அறிவைப் புகட்டும்,

இறையோ அன்று தம் மகனை,

இல்லா ஊரில் வளரச் செய்தார்;

இதைக் கற்பாரா இந்நாட்டார்?


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.