யோவான் 7:44-46.

நல்வழி:

பேச்சின் சிறப்பை இயேசுவில் கண்டு,

பிடிக்கப் போனோர் திரும்புகிறார். 

மூச்சாம் அன்பை வாழ்வில் கண்டு,

முடிவை மாற்றி, விரும்புகிறார். 

ஏச்சால் பலபேர் இகழ்தல் கண்டு, 

இறைவழி விட்டு திரும்பாதீர். 

நீச்சல் மாறும், நிறைவும் பாரும்;

நெறியிலா வாழ்வை விரும்பாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.