ஆவியர் அருளாறு!

ஆவியர் அருள்!


நற்செய்தி: யோவான் 7:37-39.

நல்வழி:


ஆறாய் ஓடும் ஆவியர் அருளை,

அடைவாய் அன்பா, வருவாயே. 

தேறாதழிக்கும் தீவினை களைய,

தெய்வ வாக்கும் பெறுவாயே.

பேறாய் வழியும் பேரின்பத்தை, 

பிறரும் அடையத் தருவாயே.

கூறாதிருப்பின், பழி எனக்காகும்;

கீழ்ப்படிந்தால், திருவாயே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.