வெவ்வேறு விதம்!

வெவ்வேறு கருத்துகள்!
நற்செய்தி: யோவான் 7:36.


36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.  


நல்வழி:


பொருளறியாமல் புரட்டிப் பேசும்,

புனைவார் அலையும் புவியதனில், 

அருளின் வாக்கும் தலைகீழாகும்;

அன்னார் கலைகள் பரவுமெனில்.

இருளை இருளாய்க் காணும் கண்கள்,

என்னில் தாரும் நல் இறையே.

திருவருளால்தான் ஒளியே தெரியும்;

தெளிவு என்றும் உன் நிறைவே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.