சிதறடிக்கப்பட்டோர்!

சிதறடிக்கப்பட்டோர் சேர்க்கப்படுவார்!
நற்செய்தி: யோவான் 7:35.
35. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?


நல்வழி:

சிதறிக் கிடந்த யூதரைப் போல்,

சிறைப்பட்டிருந்த என் இனமும்,

உதறிக் கொண்டு எழுவதற்கு,

உதவிகள் செய்தது யாராகும்?

கதறிக் கொண்டு முறையிட்டும்,

கண்ணீர் துடைக்க வரார் கண்டு, 

பதறித் துடித்து இறை தந்தார்

;பாடினேன், இயேசு பேராகும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.