சிதறடிக்கப்பட்டோர் சேர்க்கப்படுவார்!
நற்செய்தி: யோவான் 7:35.
35. அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?
நல்வழி:
சிதறிக் கிடந்த யூதரைப் போல்,
சிறைப்பட்டிருந்த என் இனமும்,
உதறிக் கொண்டு எழுவதற்கு,
உதவிகள் செய்தது யாராகும்?
கதறிக் கொண்டு முறையிட்டும்,
கண்ணீர் துடைக்க வரார் கண்டு,
பதறித் துடித்து இறை தந்தார்
;பாடினேன், இயேசு பேராகும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.