திருவட்டாறு!

திருவட்டாறு நோக்கி….


பிறந்த ஊரைப் பிரிந்த நெஞ்சம்,

பித்தாய் மாறாதிருப்பதற்கு,

திறந்த கையுள் அணைத்துத் தஞ்சம் 

தந்த சென்னை ஏதாகும்.

மறந்த  என்னை புதுக்கக் கெஞ்சும்,

மனதை மகிழ்விப்பதற்கு,

பறந்து நானும் ஊரைக் கொஞ்சம், 

பாரேன் எனில்  தீதாகும்!


-கெர்சோம் செல்லையா.  

யோவான் 7:32-34.

முறுமுறுப்பார்!


நற்செய்தி: யோவான் 7:32-34. 

நல்வழி:  

அறவழி கூறும் இடங்களில் இன்று,

அறியார் பலரும்  முறுமுறுப்பார்.

திறமிகு மாந்தர் அவரேயென்று, 

தெய்வ வாக்கும்  மறுதலிப்பார். 

குறை அறிவாரோ உணர்ந்து நின்று,

கிறித்துவை நோக்கி வேண்டிடுவார்.

நிறை வாழ்வளிக்கும் தெய்வம் ஒன்று, 


நேர்மையில் நடத்தி ஆண்டிடுவார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.