செப்படி வித்தை!

செப்படி வித்தை!
நற்செய்தி: யோவான் 7: 31.

நல்வழி:


செப்படி வித்தை செய்வோர் என்றால்,

செல்வார் திரண்டு பெருங்கூட்டம்.

எப்படி வாழ்தல் நலமென்றுரைத்தால்,

இவர்கள் கலைவார் குரங்காட்டம். 

இப்படி நம்மவர் இருப்பதனால்தான்,

இல்லை அவையில் இறையூட்டம். 

சொற்படி வாழ ஒப்புக்கொடுப்போம்.

சிலுவைப் பாதையே, நம் ஓட்டம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.