கேட்போம் கிறித்துவின் அறிவு!

கேட்போம் கிறித்துவின் அறிவு!

நற்செய்தி: யோவான்: 7:25-26.25.

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?26. இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?

நல்வழி:

கேட்டவர் வியக்கப் பதில் உரைக்கும்,

கிறித்துவின் அறிவு கேட்டிடுவோம்.

நாட்டவர் கொண்ட ஐயம் போக்கும்,

நல்லுரை கூறவும் கேட்டிடுவோம்.

ஏட்டினில் கற்கும் அறிவுகள் யாவும்,

யாவரும் விளங்கக் கேட்டிடுவோம்.

பாட்டினைப் பாடிச் செல்லா வண்ணம்,

பண்பு வளரவும் கேட்டிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.