யோவான் 7:21-24.

நல்வழி!

முகத்தைப் பார்த்து முடிவைக் கூறும், 

மூடர் பழக்கம் முடித்திடுவோம். 

நகத்தைக் காட்டி விரல் என்றெழுதும்,

நடைமுறையினையும் பொடித்திடுவோம்.

இகத்தில் இல்லா நேர்மை அருளும், 

ஈசன் வாக்கு படித்திடுவோம்.

அகத்தின் அழுக்கு, கரைதல் காணும்; 

ஆண்டவரை நாம் பிடித்திடுவோம்.  

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.