இயேசுவைத் தேடுகிறார்!நற்செய்தி; யோவான் 7:9-11.
9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
நல்வழி:
தேடும் நோக்கம் எதுவென அறிவோம்.
தெய்வம் நெஞ்சைப் பார்க்கிறார்.
வாடும் நினைவை அவரிடம் எறிவோம்.
வறியோர் பேற்றைச் சேர்க்கிறார்.
நாடும் விருப்பம் நன்மையில் முடியும்;
நல்லவர் இயேசு ஆள்கிறார்.
கூடும் என்று பற்றுடன் பிடியும்.
கிறித்து இல்லார் மாள்கிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.