திருவிருந்து!

திருவிருந்து!நற்செய்தி:

யோவான் 6:52-54.52.

அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

நல்வழி:

பிட்டு, கிறித்து தன் சதை தந்தார்;

விட்டு, உயிரின் குருதியும் தந்தார்.

கெட்டு, அழிவார் மீட்டெடுக்க,

கொட்டுகின்ற, திருவிருந்தானார்.

எட்டு திக்கும் மனிதர் வந்தார்;

ஒட்டு தீங்கை விட்டிட வந்தார்.

திட்டு வாக்கு கூறார் அணைக்க,

மட்டு காணா மறு விருந்தானார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.