நாடு இங்கே! நாடிங்கே!
நற்செய்தி: யோவான் 6:39-40.39.

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

நல்வழி:

ஒரு சிலர் வாழ ஊரையே அழிக்கும்,

உண்மையை உணரார் நாடு இங்கே.

வறுமையில் வாடும் அனைவருக்களிக்கும்,

வானருள் மீட்பை நாடிங்கே!

பெருந்திரள் செல்வம் வாழ்வென உழைக்கும்,

பேதையர் ஆடும் நாடு இங்கே.

சிறுவன் என்றாலும் சென்றே அழைக்கும்,

சீரருள் மீட்பரை நாடிங்கே!   


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.