உணவு, நீர்!

உயிருணவு!
நற்செய்தி: யோவான்: 6:35.  

நல்வாழ்வு:


மும்முறை வருகிற பசி விடாய்ப்பு,

முறையாய் என்னில் வருமுன்பு,

இம்முறை இல்லை என்றுரையாது,

இன்னீர் உணவு தருபவரே,

உம்மிடம் வந்தோர் ஒரு பொழுதாவது,

உணவிற்கலைந்து வருந்துவது,

நம்புதற்கரிது என்னும்படிக்கு,

நன்னீர் உணவு தருவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.