சட்டமா? அருளா?

மோசேயின் திருச் சட்டம்!

நற்செய்தி: யோவான் 5:45-47.

நல்வழி:


சட்டம் உயர்ந்தது என்பாரும்,

சரிதான் என்று சொல்வாரும்,

கட்டம் கட்டிய தம் வாழ்வில்,

கறை இல்லாது வாழ்ந்தாரா?

திட்டம் போட்டு வாழ்ந்தாலும்,

திரும்பத் தவறு செய்யும் நாம்,

விட்டம் அளக்க இயலாத,

விண் அருளோடு வாழ்வோமா?


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.