தந்தை-மைந்தன்!

இறையைக் காட்டும்  இறைமைந்தன்!
நற்செய்தி: யோவான் 5:19-20.  

19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 

நல்வழி: 

பெற்றோர் பார்த்து பிள்ளை கற்பார்.

பெருமை கொண்டு அதனுள் நிற்பார்.

மற்றோர் மதித்து, நன்மை செய்வார்,

மக்களும் உணர, அவரும் உய்வார்.

கற்றோர் இன்று அறவழி மறந்தார்;

காதால் கேளா பிள்ளையும் துறந்தார்.

பற்றோர் எப்படி இறையறிவுறுவார்?

பார்க்கும் ஏசுமகனே தருவார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.