மைந்தன் இயேசு!

மைந்தன் இயேசு!

நற்செய்தி: யோவான் 5:17-18. 17.

இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

நல்வழி:

தந்தையென்று இறை அழைத்து,

தனயனாக மொழி உரைத்தார்.

மந்தையாடாய் நமை நினைத்து,

மேய்ப்பனாயும் வழி அமைத்தார்.

சொந்தமாக்கி எடுத்தணைத்து,

சொற்படியே பழி துடைத்தார்.

இந்தயேசு கிறித்துவேதான்,

என்னிலும் விழி திறந்தார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.