மாற்றாரை மதித்தல்!

மாற்றாரை மதித்தல்!

மாற்றுக் கருத்தைக் கேட்க மறுக்கும்
மமதை என்னில் பிறக்குமெனில்,
தோற்றுப் போகும் நிலைதான் தொடரும்.
தொய்யும் நெஞ்சே புரிந்திடுவாய்.
வேற்றுச் சமய அறிவை வெறுக்கும்
வெறியில் என் வாய் திறக்குமெனில்,
தூற்றுங் கூட்டத்  துயர்தான்  படரும்.
தூய்மை அன்பே தெரிந்திடுவாய்!


-செல்லையா.