ஒளி உண்டாகுக!

ஒளி உண்டாகுக!நற்செய்தி: யோவான் 3:19-21.
19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.


நல்வழி:


ஒளியுண்டாகுக எனும் வாக்குரைத்து,

உலகு படைத்தார் இறைவன்.

வெளியாரடைவது கண்டு வெறுத்து,

வெளிச்சம் தடுக்கிறான் மனிதன்.

தெளிவில்லா இவர் நெஞ்சினகத்து,

தேவை ஒளியாம் இறைவன்.

எளிதாய் நாமும் ஏற்கும்படிக்கு,

இயம்பும் இயேசு புனிதன்!


ஆமென்.


-செல்லையா.