உன் வழி தவறு!

உன் வழி தவறு!


முன் வழி காட்டும் நன் மகனேசு,

பன் வழியாளரைப் பழித்தாரா?

“உன் வழி தவறு, என்வழி உயர்வு”

என்றவர் கூறி அழித்தாரா?

தன்னினமாயினும் அன்னியராயினும்,

அன்பினை மறந்து மொழிந்தாரா?

இன்னில மக்கள் வன்முறை ஒழிக்க,

நன்மைகள் மட்டும் பொழிவீரா?

-செல்லையா.